முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 711சிங்கள அரசை பாதுகார்த்து விட்டு இப்ப அவர்களிற்கு எதிராக ஆற்பாட்டமா?

தமிழர்களின் உரிமைக்காக பாரிய போராட்டம் - கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில், நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது விவாவதிக்கப்படவுள்ளது. பகிரங்க அழைப்பு tna protest jaffna மேலும், இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது

710 இலங்கையில் நாயாக மாறிவரும் மனிதர்கள்?

10வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சகோதரன் மற்றும் சிறியதந்தை - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம் வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். சம்பவத்தின் உண்மை தன்மை 10வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சகோதரன் மற்றும் சிறியதந்தை - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம் | Child Abuse Cases Tamil School Sudent குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் வன்புணர்வுகையும் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரிய

d 709 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 2 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 2 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை? சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்லூரிகள், வட இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து புதிய மாணவர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளன. 2023-03-29_16-24-26.jpg Australian universities block international student visa applications from Punjab and Haryana states in north India. Source: Supplied வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விண்ணப்பங்களை, சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக தடை செய்துள்ளமை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாணவர் விசா விண்ணப்பங்களை முழுமையாக தாக்கல் செய்யாமை, மற்றும் மோசடியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு நிராகரிக்கும்போக்கு அதிகரித்துள்ளதையடுத்து, சில பல்கலைக்கழகங்கள் இத்தற்காலிக தடையை கொண்டுவந்துள்ள

d 708 மருத்துவரீதியா பிரச்சனைகள் கண்டிப்பாகப்பார்க்க வேண்டியது,

உடம்பில் கால்சியம் சத்து குறைந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்னு தெரியுமா? கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும். இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும். அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் நாம் சந்திக்கக் கூடும். இதைப் பற்றி நாம் இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம். கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் அதீத உடற்பயிற்சி அதிகளவில் குளிர்பானங்கள் குடித்தல் மாதவிடாய் நிறுத்தம் அதிகளவில் தேநீர், காபி குடித்தல் அதிக ஆல்கஹால் உட்கொள்ளுதல் calcium-deficiency-symptoms கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை, ஈறு நோய்கள், பசியின்மை, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். கால்சி

d 707 இரண்டுமே சிங்களக் கைக்கூலிகள்தான் ஆனால் இரண்டு குழுக்களிற்ம் இடையே பாரிய மோதல்,

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டம்! March 30th, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வாகனேரி வயலை குறி வைத்துள்ள பிள்ளையானுக்கும், பிரதேச செயலகத்தினருக்கும் இதன்போது போராட்டக்காரர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். போராட்டம் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் அழைத்த வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பிரதேச செயலகத்தால் குறித்த வயல் காணி அபகரிக்கப்பட்டு, சோளர் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

d 706 இராணுவத்தினரே இதைச் செய்தார்களா?

யாழில் கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்; அதிர்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. யாழில் கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்; அதிர்ச்சியில் மக்கள்! | Shivlingam That Suddenly Appeared Beach In Yali இந்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவலிங்கம் காணப்படும் இடத்தியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகிறது.

d 705 இலங்கையில் மருந்திற்குத் தட்டுப்பாடு காரணம் என்ன?

இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் 2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால் மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர். மத்திய மாகாணத்தில் மாத்திரம் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக விலைக்கு விற்கப்படும் இன்சுலின் இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் | Without Insulin Diabetics Die 100 மில்லிக்கு குறைவான சிறிய குப்பிகள் ரூ. இரண்டாயிரத்து அறுநூறுக்கும் மேல் விற்பளைனயாவதால், பல நோயாளிகளால் அதை வாங்க முடியவில்லை. இன்சுலின் பெறாததால் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்

d 704 தமிழீழப்பகுதியில் கொலைஅதிகரிப்பு சிங்களக் கைக்கூலிகளே பின்னால் இருக்கலாம் என மக்கள் சந்தேகம்,

இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டி படுகொலை - யாழில் சம்பவம்..! கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் வெட்டுக் காயங்கள் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டி படுகொலை - யாழில் சம்பவம்..! | A Family Member Was Hacked To Death Jaffna கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார். இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

d 703 இலங்கையில் தொடரும் தொடர்ச்சியான கொலைகள்

இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமான முறையில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை! மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (28-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமான முறையில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை! | Two Family Members Were Massacred In Monaragala இச்சம்பவத்தில் 41 வயதான தர்மபால விஜயசிறி என்பவரும், 38 வயதான ரோஹித குணரட்ன என்பவருமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணை காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமான முறையில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை! | Two Family Members Were Massacred In Monaragala இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 702 புலநாய்வு முகவர்களின் சிலந்திவலையில் உன்மையான போராளிகளும் தமிழீழ ஆதரவாளர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்,

தலைவர் இருக்கின்றாரா அல்லது இல்லையா அவரின் வீரச்சாவை தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு விடுதலைப் புலிகளிற்குக்கிடையாது, மாறாக அவரின் இலக்ஸ்சியமான தமிழீழத்தை அடைவதே எமது கடமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள், எமது தேசியத்தலைவருக்கு நாம் பிறந்தநாள் ஒன்றே போதுமானது என தீர்மானித்துள்ளோம், அவர் என்றும் பிறந்தநாளுக்கு உரியவாகவும் தமிழர்களின் கடவுளாகவும் மதிக்கப்படுவார்,பிரபாகரனின் வீரச்சாவை அறிவிக்க கோடி ரூபாயில் திட்டம் - தமிழகத்தில் இரகசிய நகர்வு அண்மைகாலமா உலகத்தமிழர் மத்தியில் பேசுபொருளாக தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இருப்பு தொடர்பான விடயமே உள்ளது. இந்நிலையில் பழநெடுமாறனின் அறிக்கையை தொடர்ந்து இந்த விடயம் மேலும் பல பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறிருக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதை தமிழ் நாட்டில் மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்து அது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும், இதற்காக முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில், வீரச்சாவை அறிவிக்கும்

d 701 30 வருட போராட்ட காலத்திலும் கடக்காத துயரம்

மீண்டும் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்து 8 பேர் இன்று காலை தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர, பார்வதி மற்றும் அவரது பேரன்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இவ்வாறு சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் மீண்டும் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் | Sri Lankan Tamils Who Took Refuge In Tamil Nadu மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இறங்கி நிற்பதான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரையோர காவல்படையினர் சென்று 8 பேரையும் மீட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பொருளாதார நிலைமை இன்னும் மாறவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை.

d700தமிழீழப் பகுதியில் பாரிய சோகம்,

அதிகாலையில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு.. ! பொலநறுவை - வெலிக்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29.03.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் (தம்பட்டை) சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் என அடையாளங்காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரனை அதிகாலையில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு..! | Polonnaruwa Accident Today Police விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து பற்றிய மேலதிக விசாரனையை வெலிக்கந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

d 699சிங்களவர்கள் மத்தியில் பாலியல் வன்முறை அதிகரிப்பு,

பாடசாலை ஒன்றில் அரங்கேறிய சம்பவம்; மாணவனை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை! பா கம்பஹா - பல்லேவெல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 வயதான பாடசாலை மாணவணை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை புரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயதான மாணவனை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் மேலும் சில மாணவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பாடசாலை ஒன்றில் அரங்கேறிய சம்பவம்; மாணவனை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை! | Student Was Tied To A Tree And Sexually Tortured மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர். மாணவன் பாடசாலை மைதானத்தில் உள்ள கழிவறைக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

d 698 யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்;

யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; வெளியான பின்னனி! திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன அங்குள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; வெளியான பின்னனி! | Children S Home Office Beaten Up In Jaffna சிறுவர் இல்லத்தின் விடுதி காப்பாளராக நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் , அங்கு வந்த சில மாதங்களிலேயே விடுதி முகாமையாளராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். பதிவு உயர்வு பெற்ற பின்னர் , சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை உடல் ரீதியாக கடுமையான தண்டனைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது. திறப்பினால் ஒரு சிறுவனுக்கு தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியமை , சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்ததாகவும் கூறப்படுகின்றது. அவரது கொடுமைகள் தாங்காது விடுதியை விட்டு தப்பியோடிய சிறுவனை தாயார் மீள இல்லத்தில் ஒப்படைக்க வந்த போது , தாயாருடன் அநாகரிக வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

d 697 இளம் பெண்ணை குத்திக் கொலை

இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சஜித் கட்சியின் வேட்பாளர்.. ! தங்காலை நெடோல்பிட்டிய விவசாய சேவை நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் நேற்று உரம் விநியோகிக்கப்படாமை தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தங்காலை நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமகாலத்தில் விவசாய சேவை நிலையங்களில் விவசாயிகளுக்கு உரங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நெடோல்பிட்டிய தங்காலை விவசாய சேவை நிலையத்திலும் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் போது உரம் கேட்டு குறித்த அதிகாரியுடன் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை திட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை வேலைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, ​​வீட்டின் அருகே காவலில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சஜித் கட்சியின் வேட்பாளர்..! | Young Woman Killed By Sajith Party Candidate இதில் பலத்த காயமடைந்த பெண் தங்காலை ஆதார வ

d 696 இலங்கையில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள்,

இளம் யுவதி மர்மமான முறையில் படுகொலை - கதறும் பெற்றோர் இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரத்னபுர, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் யுவதி இன்று காலை 6.30 மணியளவில் தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலம் இளம் யுவதி மர்மமான முறையில் படுகொலை - கதறும் பெற்றோர் | Young Girl Murdered சசினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது சடலம் வீட்டுக்கு அருகில் இருந்த கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி இளம் யுவதி மர்மமான முறையில் படுகொலை - கதறும் பெற்றோர் | Young Girl Murdered உயிரிழந்த சசினி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார். இரத்தினபுரி பதில் நீதவான் சுமித் ஆனந்

d 695 விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலிய தமிழர்:

விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலிய தமிழர்: இறுதி நிகழ்வு இன்று! பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தில் ஆஸ்திரேலியாவாழ் தமிழரான கார்த்தி சந்தானம் அவர்கள் கொல்லப்பட்டிருந்தநிலையில், அவரது இறுதிநிகழ்வு இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்றது. image (2).jpg Rescue crews in the Philippines climb the volcano to the crash site. Inset:Karthi Santhanam Credit: Philippine Information Agency & Facebook பிலின்பீன்ஸைத் தளமாகக்கொண்ட Energy Development Corporation (EDC) நிறுவனத்தில் தொழிநுட்ப ஆலோசகர்களாக கடமையாற்றிய ஆஸ்திரேலியர்களான முத்துகார்த்திகேயன் சந்தானம் (கார்த்தி) மற்றும் Simon Chipperfield ஆகியோர், கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி விமான விபத்தில் சிக்கியிருந்தனர். அன்றையதினம் Bicol சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம், Simon Chipperfield, விமானி மற்றும் விமானப்பணியாளர் ஆகியோருடன் புறப்பட்ட இலகுரக விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மணிலாவில் தரையிறங்க வேண்டியிருந்தபோதிலும், கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்திருந்தது. இதையடுத்து விமானத்தைத் தேடும்பணிகள் ஆரம்பிக

d 694 தமிழீழப்பகுதியில் கொலை அதிகரிப்பு நடப்பது என்ன?

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பெரும் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண் மட்டக்களப்பில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் இன்றைய தினம் (26-03-2023) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பெரும் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண் | Woman Found Dead Body In Gandhi Park Batticaloa இதேவேளை மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பெரும் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண் | Woman Found Dead Body In Gandhi Park Batticaloa சடலத்தினை மரண விசாரணையை தொடர்ந்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

d 693 தக்கதரணத்தில் சிங்களவர்களைபாதுகாத்துக்கொண்டு அவர்களை எதிரிகளாகக்காட்டிநடக்கும் தமிழ் தலைவர்கள்,

தமிழர் தாயகத்திலுள்ள வெடுக்குநாறி ஆலய பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட சரவணபவன்! தமிழர் தாயகத்தில் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ள பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியாகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கமும் ஏனைய விக்கிரகங்களும் இடித்தழிக்கப்பட்ட செயற்பாட்டை நோக்கவேண்டியுள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வெடுக்குநாறி ஆலய சிவலிங்கம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதும் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று, ஆலய பூசகர் மற்றும் நிர்வாகிகளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழர்களின் தாயகத்தை கபளீகரம் செய்து பௌத்தமயமாக்கும் திட்டத்துக்காகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரிலும் கைவைத்துள்ளார்கள். வெடுக்குநாறி மலையில் புத்தரை குடியேற்றுவதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். தங்களது இந்தத் திட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினருக்கு பல தொந்தரவுகளை கடந்த காலத்தில் தொல்பொருள் திணைக்களம் மற்றும்

d 692 விளம்பரத்தால் வந்தவினை,

பிரபல நடிகை சடலமாக மீட்பு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல நடிகை அகன்சா துபே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு 25 வயது. இவர் போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகை ஆவார். 17 வயதில் இருந்து நடிப்புத் துறையில் தனது பங்களிப்பை அளித்த அகன்சாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை வெளியாகவில்லை. காதலனை பகிரங்கமாக அறிவித்திருந்த அகன்சா பிரபல நடிகை சடலமாக மீட்பு | Famous Actress Recovered As Dead Body கடந்த 25ம் திகதி இரவு சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை அனுப்பியிருந்தார். கடந்த காதலர் தினத்தன்று, இந்திய நடிகர் மற்றும் பாடகர் சமர் சிங் தனது காதலன் என்று ஆர்கன்சா பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

d 691உணவு நடைமுறைகளில் மாற்றங்களைக்கொண்டுவரலாம்,

சுகரை கட்டுப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் கருப்பு அரிசி தோசை சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும். எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. சுகரை கட்டுப்படுத்த கருப்பு அரிசி தோசை அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம். சக்கரை நோயைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கொழுப்புக்களை குறைக்க உதவும் கருப்பு அரிசி தோசை.இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கருப்பு அரிசி - 1 கிண்ணம் உளுந்து - 1/4 கிண்ணம் வெந்தயம் - 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவையான அளவு சுகரை கட்டுப்படுத்த கருப்பு அரிசி தோசை செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை நான்க

d 690காலத்தால் அழியாத காவியங்கள் மீழ் பதிவு

பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது. வீட்டிலிருந்த நாட்களில் நண்பனின் வீட்டில் நிகழ்வொன்றுக்குப் போயிருந்தான். புகைப்படப் பிடிப்பாளனும் நண்பன் வீட்டாருடன் சேர்ந்து படமெடுக்க வேண்டி யிருந்ததால் அவனிடம் புகைப்படக் கருவியைத் தந்து படமெடுக்கச் சொன்னார்கள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. படமெடுக்க வேறெவரும் இருக்கவில்லை. ஒருவாறு முயற்சித்து படமெடுத்துவிட்டான். பிறிதொரு நாளில் அந்த அல்பத்தைப் பார்த்தபோது அவனெடுத்த புகைப்படத்தில் புகைப்படப் பிடிப்பாளனின் கை மட்டுமே அகப்பட்

d 689 இலங்கைத்திருடர்கள்மக்களை உளவியல் ரீதியாகக்கை ஆழுகின்றார்கள்,

இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய திருடனின் செயலில் இலங்கையில் திருடன் ஒருவன் செய்த செயலால் நாட்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அண்மையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார். இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய திருடனின் செயலில் | In The Action Of The Thief Of Sri Lanka எழுதப்பட்டிருந்த கடிதம் அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார். அந்த பதிவில் “உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. இதனால் தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது. அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிததத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்

d 688 உன்மையை உணரத்தொடங்கும் சிங்களவர்கள்

" அன்று குட்டிமணி சொன்னது இன்று உண்மையாகிவிட்டது " - காத்திருக்கும் பேராபத்து..! பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அன்று குட்டிமணி, தங்கத்துரை தெரிவித்த கருத்து இன்று நிதர்சனமாகியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்தார். யாழ். ரிம்மர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற பொது சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் பங்குபற்றுபவர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டம் " அன்று குட்டிமணி சொன்னது இன்று உண்மையாகிவிட்டது " - காத்திருக்கும் பேராபத்து..! | Sri Lanka War Crimes 2009 Ranil குட்டிமணி பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாத தடைச் சட்டம் என்றோ ஒருநாள் தெற்கு மக்களையும் பாதிக்கும் என்றார். இப்போது அதை உணரக்கூடியதாக உள்ளது எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம். ஆனால் ரணில்-ராஜபக்சவினர் பய

d 687 சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? சாப்பாட்டில் முடி விழுவது என்பது சாதாரண விஷயம் அல்ல! சமைக்கும் பொழுது எப்பொழுதாவது இந்த மாதிரி நடப்பது உண்டு. இதற்கு நம் முன்னோர்கள் சில பலன்களும் கூறி வைத்தது உண்டு. அந்த வகையில் சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம்? சமைக்கும் பொழுது பொதுவாக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தலைமுடியை விரித்துக் கொண்டு சமைப்பது கூடாது. தலையை சொரிந்து கொண்டே சமைப்பதும் கூடாது. சிறிய சிறிய ஹோட்டல்கள் முதல் மிகப்பெரிய உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் சமைக்கும் பொழுது தலையில் தலை கவர் அணிந்து சமைக்க வலியுறுத்தப்படுகிறது இதனால் தான்! சாப்பாட்டில் முடி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What It Means To Have Hair In Food சமையல் செய்யும் பொழுது இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் தலைமுடி சமையலில் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் கவனிக்கத்தக்கது ஆகும். தெரியாமல் முடியுடன் சாப்பிட்டு விட்டால் வயிற்று கோளாறுகள் பல ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். தொடர்ந்து இது போல் நடப்பதை ஜ

d 886 சிறிதரனின் பேச்சுக்கள் நிலையானதாகயிருக்க வேண்டும்,

தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் – சிறிதரன் தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும். அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு – சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து, கொண்டாடும் நிலை காணப்படுகிறது. ஆனால் நாடு 54 பில்லியன் டொலர் கடனாளியாக உள்ளது. நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்புக்களை

d 685 ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்!

ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்! ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. 20230306001771720550-minihighres.jpg Protesters attend a rally demanding permanent visas for refugee outside Parliament House in Canberra, Monday, March 6, 2023. Credit: AAP Image/Lukas Coch பெப்ரவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையான காலப்பகுதிக்குரிய தரவுகளை, ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் 100,217 பேர் உள்ளனர். இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இன்னமும் நாடு கடத்தப்படாத நிலையில் உள்ளனர். மீதி 27,342 பேரின் விண்ணப்பங்கள் உண்மையான அகதிகள்தானா என நிர்ணயம் செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. Advertisement லேபர் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மொத்தமாக 12,859 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பெப்ரவரியில் விண்ணப்பங்களை தாக்கல்செய்த 1,725 பேரும் அடங்குவர்.(இவர்களில் 61 பேர் இலங்கைப் பின்னணி கொண்டவர்கள்

d 684 முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! முல்லைத்தீவு - மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (23-03-2023) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Married Woman Died Of Electric Shock In Mullaitivu சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இலக்கம் 92 கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான பிரபாகரன் சுதாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் திருமணமாகி 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Married Woman Died Of Electric Shock In Mullaitivu குறித்த பெண் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதி

d 683 பேரினவாதத்தின் பசிக்கு இரையாகும் தமிழர் தேசம்

பேரினவாதத்தின் பசிக்கு இரையாகும் தமிழர் தேசம் - கைகட்டி மௌனிகளாக தமிழரின் ஏக பிரதிநிதிகள்! சிங்கள மக்கள் வாழாத தமிழர் தாயகத்தில் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் பௌத்தமயமாக்கல் தீவரமடைந்து வருகின்றது. அதுமட்டுமன்றி தமிழரின் வழிபாட்டிமான இந்து ஆலயங்கள் மீதும் தொல்பொருள் திணைக்களம் கைவரிசை காட்டி வருகின்றது. அதேநேரம் இன்னுமொரு தரப்பு தமிழரின் இருப்பையே இல்லாது செய்யும் நோக்கோடு நில ஆக்கிரமிப்பில் மும்முரமாக களமிறங்கி கச்சிதமாக செயலாற்றி வருகின்றது. இவ்வாறாக தமிழர் தாயகத்தில் பல அக்கிரமங்களும் அடாவடிகளும் அரங்கேறி வரும் வேளை, தமிழரின் ஏக பிரதிநிதிகள் நாங்களே என மார் தட்டித் திரியும் தலைமைகள் மௌனம் காப்பது பெரும் கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர் பகுதியில் பிரமாண்ட பௌத்த வழிபாடு பேரினவாதத்தின் பசிக்கு இரையாகும் தமிழர் தேசம் - கைகட்டி மௌனிகளாக தமிழரின் ஏக பிரதிநிதிகள்! | Navatkuli Kurunthur Malai Tamil Land Expropriation இதனை தொடர விடுவது ஆபத்தானது என சமூக ஆர்வலர்களும் தமிழ் மக்களும் கடும் ஆவேசத்த

d 682 சிறுபாண்மை முஸ்லிங்கள் பெரும்பாண்மை சிங்களவர்களிற்காகவே வாழ்ந்தார்கள் எதிர்காலத்தில் எப்படி வாழப்போகின்றார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்?

“தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே என்ற‌ நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் க‌ருத்தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ளது. இவ்வாறாக‌ பேசுவ‌த‌ன் மூல‌ம் இன‌வாதி க‌ருணாவை பின்ப‌ற்றி முஸ்லிம் இன‌வாத‌ம் பேசி த‌மிழ் ம‌க்க‌ளை உசுப்பேத்தி வாக்குக‌ள் பெற‌ க‌லைய‌ர‌ச‌னும் முனைகின்றார் என‌வும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இனவாத கருத்துக்கு கண்டனம் “தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து | Kalaiyarasan Condemned Mp S Racist Comments இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மேலும் தெரிவித்த‌தாவ‌து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தபோது, இவ்வாறு பிழையான இன‌வாத‌ க‌ருத்துக்க‌ளை தெரிவித்துள்ளார். கிழ‌க்கு மாகாண‌த்தின் அம்பாறை மாவ‌ட்ட‌ வ‌ர‌லாற்றில் 1960க‌ளில் த‌மிழ், முஸ்லிம் க‌ல‌வ‌ர‌ங்க‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌. அப்போது இரு

d 681 கருமையான, அடர்த்தியான கூந்தலை நீங்கள் விரும்புபவரா

கருமையான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு! பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான். ஆனால் அந்தக்காலத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தரையை தட்டும் அளவிற்கு முடி வளர்ந்திருக்கும். அவர்கள் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள். ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு அந்தவகையில் முடிக்கு கருவேப்பிலை மிக மிக பயனுள்ளது. கறிவேப்பில்லைக்குழம்பு கருவேப்பில்லையில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உங்கள் முடிவளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. இந்

d 680 அனைவருக்கும் விசா தரலாம் ஆனால் வெளி இடங்களிற்குச்செல்ல வேண்டும் மெல்போன்

விக்டோரியா மாநிலத்திற்கான skilled regional விசா நிபந்தனையில் முக்கிய மாற்றம்! விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளில் குடியமர்வதற்கான Skilled Work Regional visa (Subclass 491) தொடர்பில் புதிய மாற்றமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் regional பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு, தற்போது மெல்பனில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் குறித்த விசாவிற்கு மெல்பனில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கமுடியாத நிலை காணப்பட்டது. இப்புதிய மாற்றத்தின்படி இனி விக்டோரியாவில் வசிக்கும் எவரும் Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். Advertisement ஆனால் இவ்வாறு 491 விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த விசாவைப் பெறும்பட்சத்தில், regional விக்டோரியாவிற்கு சென்று வசிக்கவும் வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.

d 679 தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள்

வவுனியாவில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் 14 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சிறுமி வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது இளைஞர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வவுனியாவில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் | Youth Molested A 14 Year Old Student In Vavuniya இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி சம்பவம் தொடர்பில் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான இளைஞரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

d 678 தமிழீழப் பகுதியில் பெண்களின் தூர் நடத்தை அதிகரிப்பு?

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான தகவல் | Information Aborted In Jaffna Teaching Hospital யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகின்றோம். இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளோம். அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

d 677 கடனில் வாழும் இலங்கை

ஐ.எம்.எவ் கடனுதவி - அமெரிக்காவின் அறிவிப்பு வெளியானது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீடிக்கப்பட்டுள்ள கடனுதவிக்கான அனுமதியை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், அது பொருளாதார மீட்சிக்கான வழியாக இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பில் நேற்றைய தினம் (21ஆம் திகதி) தனது டுவிட்டர் கணக்கில் நல்ல செய்தி என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஐ.ஐ. எம். எஃப். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான துணைத் தலைவர் மார்ட்டின் கிரேஷரும் நேற்று (21ஆம் திகதி) தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருந்தார்.

d 676 92 வயதில் 5வது திருமணம்:ஆஸ்திரேலிய செல்வந்தர்

92 வயதில் 5வது திருமணம்:ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdochஇன் அறிவிப்பு உலகெங்கும் வைரல் உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch, தனது 92வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள செய்தி ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. FrrkXr8WcAATZ9A.jfif Rupert Murdoch to marry for the fifth time Credit: Twitter NyPost பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்கும், Rupert Murdoch, 66 வயது Ann Lesley Smithஐத் திருமணம் செய்யவுள்ளதாக தமக்குச் சொந்தமான New York Post-நாளேட்டின் ஊடாக அறிவித்திருந்தார். மீண்டும் காதலில் விழுவது பதற்றமாய் இருந்ததாகவும், ஆனால் இதுவே தமது கடைசிக் காதலாக இருக்கும் என்றும், தான் மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த Ann Lesley Smithஐ கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடந்த ஒரு விருந்துபசார நிகழ்வில் வைத்து சந்தித்திருக்கிறார்.