முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 685 ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்!

ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்!
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. 20230306001771720550-minihighres.jpg Protesters attend a rally demanding permanent visas for refugee outside Parliament House in Canberra, Monday, March 6, 2023. Credit: AAP Image/Lukas Coch பெப்ரவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையான காலப்பகுதிக்குரிய தரவுகளை, ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிலையில் சுமார் 100,217 பேர் உள்ளனர். இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இன்னமும் நாடு கடத்தப்படாத நிலையில் உள்ளனர். மீதி 27,342 பேரின் விண்ணப்பங்கள் உண்மையான அகதிகள்தானா என நிர்ணயம் செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. Advertisement லேபர் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மொத்தமாக 12,859 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பெப்ரவரியில் விண்ணப்பங்களை தாக்கல்செய்த 1,725 பேரும் அடங்குவர்.(இவர்களில் 61 பேர் இலங்கைப் பின்னணி கொண்டவர்கள்) இதேவேளை பெப்ரவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையான காலப்பகுதியில் 142 பேருக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் இலங்கைப் பின்னணிகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2021 இல் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் மிகவும் அதிகமாக தாக்கல்செய்யப்படுவதாகவும், இவற்றுக்கான பரிசீலனைக்காலம் மிக அதிகரித்திருப்பதாகவும், குடிவரவுத் துறையின் முன்னாள் துணைச் செயலாளர் ரிஸ்வி The Guardian-இடம் தெரிவித்தார். மேலும் 1 லட்சம் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாட்டில் தற்போது இருப்பதாகவும், இத்தகைய நிலையை தான் முன்பு கண்டிருக்கவில்லை எனவும் ரிஸ்வி சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?