கருங்கடலில் பதற்றம் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதி தள்ளியது ரஷ்ய விமானம்
கருங்கடலில் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதித் தள்ளியுள்ளது. இதனால் அந்த ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொருங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க இராணுவத்தின் எம்.க்யூ -9 ரக டிரோன் வழக்கமாக சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷ்ய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கண்டனம்
கருங்கடலில் பதற்றம் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதி தள்ளியது ரஷ்ய விமானம் | Us Drone Crash
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இது தொடர்பாக தெரிவிக்கையில், "பாதுகாப்பற்ற மற்றும் தொழில்சார்ந்த இடைமறிப்புக்காக" ரஷ்யாவை சாடியுள்ளார், மேலும் நிலைமை குறித்து அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மிக அருகில் வருவது போன்ற சம்பவங்கள் "அசாதாரணமானவை அல்ல" என்று கிர்பி கூறினார்.
இதேவேளை ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் இன்று மாலை இடம்பெற்ற செய்தியில்,கருங்கடலில் அமெரிக்க ட்ரோன் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளது. தொகுப்பாளர் கூடுதல் கருத்து இல்லாமல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை வாசித்தார்.
அமெரிக்க வெளியுறவு துறைக்கு அழைக்கப்பட்ட ரஷ்ய தூதுவர்
கருங்கடலில் பதற்றம் - அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதி தள்ளியது ரஷ்ய விமானம் | Us Drone Crash
இந்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்க அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதுவர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா மற்றும் யூரேசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளரான Karen Donfried அவர்களால் முறையான எதிர்ப்பை முன்வைப்பார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்