இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சஜித் கட்சியின் வேட்பாளர்..!
தங்காலை நெடோல்பிட்டிய விவசாய சேவை நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் நேற்று உரம் விநியோகிக்கப்படாமை தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சமகாலத்தில் விவசாய சேவை நிலையங்களில் விவசாயிகளுக்கு உரங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நெடோல்பிட்டிய தங்காலை விவசாய சேவை நிலையத்திலும் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் போது உரம் கேட்டு குறித்த அதிகாரியுடன் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை திட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வேலைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, வீட்டின் அருகே காவலில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சஜித் கட்சியின் வேட்பாளர்..! | Young Woman Killed By Sajith Party Candidate
இதில் பலத்த காயமடைந்த பெண் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான டேனிபேபி என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர், சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்