முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 629 தமிழ் இன அழிப்பின் வடிவங்கள்

ஸ்ரீ லங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் வடிவங்கள்
byChief EditorSunday, October 16, 20220 Comments தேசம் என்பது ஒரு மக்கள் திரளாகும் தேசியம் என்பது மக்கள் திரளின் கூட்டு ஆகும். இந்தவகையில் தமிழ்த் தேசியம் என்பது நிலம் மொழி பொருளாதாரம் கலாச்சாரம் எனும் நான்கு தூண்களின் மீது கட்டியெழுப்பப்பட்டதாகும். சிங்கள தேசம் இத் தூண்களை அழிப்பதன் மூலம் தமிழ் தேசத்தையும் அதன் வழி தமிழ்த் தேசியத்தையும் அழிக்க முற்படுகின்றது. இவ்வாறு இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை விரும்பாத சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழ் தேசம் அழிக்கப்படுவதுதான் இனப்பிரச்சினையாகும். அதாவது இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பாகும். இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது. சிங்கள தேசம் கருதுவதாலேயே இவ் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்கின்றது. சிங்கள பௌத்த தேசியவாதம் இவ் அழிப்பு நடவடிக்கைகளுக்கு கருத்து நிலைப் பின் புலத்தையும் வழங்குகின்றது. ஸ்ரீ லங்காவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரச இயந்திரமும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை நடைமுறையில் மேற்கொள்கின்றது. ஸ்ரீ லங்காவின் நீதிமன்றங்கள் கூட நீதி என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தமிழ் இன அழிப்பை மேற்கொள்கிறது.
இவ்வாறு தமிழ் இனம் இலங்கையில் ஒரு தேசியமாக இருப்பதன் காரணமாக சிங்கள தேசம் இலங்கைத்தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் தமிழ் தேசத்தை புறரீதியாகவும் அகரீதியாகவும் திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. முதலில் புறரீதியான தமிழ் தேசிய சிதைப்பைப் பார்ப்போம். அதாவது தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் திட்டமிட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றம் வியாபாரக் குடியேற்றம் மீனவர் குடியேற்றம் கைத்தொழில் குடியேற்றம் புனித பிரதேசங்களுக்கான குடியேற்றம் முப்படைப் பன்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்து வகையான சட்டவிரோத குடியேற்றங்கள் மூலம் சிங்கள மக்கள் தமிழர்களின் பூர்விக நிலங்களில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டு வருகின்றது. அனைத்து குடியேற்ற முறைமைகளும் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டு மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்டத்தில் உச்ச நிலைக்குச் சென்றுள்ளது. சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசியல் சட்ட அந்தஸ்தினை கொடுப்பதற்காக சிங்கள தேர்தல் தொகுதிகளும் உள்ளூராட்சி சபைகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. சிங்கள தேசம் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு அரச அதிகாரத்தை தன் வசப்படுத்திக்கொண்டு அனைத்து வழி முறைகளையும் பயன்படுத்தி தமிழ் தேசத்தை விரிவான திட்டமிடலுடன் அழித்து வருகின்றது. அதாவது சிங்கள தேசத்திற்கு சார்பான வகையில் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் சிங்கள தேசத்திற்க்கு சார்பான தேசியக் கொடி உருவாக்கப்பட்டன.
தமிழ் மொழியை அழிக்கும் வகையில் 1956 இல் தனிச் சிங்கள மொழிச்சட்டம், 1970 ஆம் ஆண்டு இன விகிதாசார அடிப்படையில் உயர் கல்வி தரப்படுத்தல் சட்டம் மற்றும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்து தழிழ் மக்களை 2009 இல் இனப்படுகொலை செய்வதற்க்காக 1978 இல் கொடூரமான பயங்கரவாதச் சட்டம் போன்ற சட்டங்களை உருவாக்கி 2009 இல் 146000 இற்க்கு மேற்பட்ட தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தும் தொடர்ச்சியாக தமிழ் இன அழிப்பை மேற்கொள்கின்றது. தமிழ் மக்களின் பொருளாதார அடித்தளம் நிலமும் கடலுமாகும். திட்டமிட்டவிவசாயக் குடியேற்றங்கள் மூலம் நிலவளம் திட்டமிட்டு பறிக்கப்பட்டது. அதாவது எல்லைத் திட்டம் கந்தளாயத் திட்டம் மொறவேவா திட்டம் மகாதிவுல்வேவாத் திட்டம் பதவியாத் திட்டம் மகாவலித் திட்டம் என்பவற்றின் மூலம் தமிழர் தாயகத்தை சிங்கள மக்களை குடியேற்றி சூறையாடியமை இது தவிர கைத்தொழில் துறை மறுக்கப்பட்டது. அரச வேலை வாய்ப்புக்களில் திட்டமிட்டு தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களை ஒன்றிணைப்பது அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த கலாச்சாரமே இது திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. சிங்களவர்கள் அறவே வாழாத பிரதேசங்களில் கூட பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இதனூடாக பௌத்த மதம் ஆக்கிரமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவற்றை தொல்பொருள் திணைக்களம் புத்தசாசன அமைச்சு முப்படையினரும் இணைந்து தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்றி தமிழ் மக்களின் வரலாற்றை புனைந்து விகாரைகளை கட்டி ஸ்ரீ லங்கா அரசு தமிழ் இன அழிப்பை தீவிரப்படுத்தி வருகின்றது. மேலும் இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களை கொலை செய்தும் சிங்கள தேசம் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது. அதாவது 1956, 1977, 1983 ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவரத்தில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு பலவந்தமாக இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு தமிழ் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் உச்ச நிலையாக 2009 ஆம் ஆண்டு 146000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை மிகவும் கொடூரமாக யுத்த விதி முறைகளை மீறி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் ஸ்ரீ லங்கா அரசாங்கம் முதலில் பச்சைச் சூறையாடலை தமிழர் தாயகத்தில் மேற்கொண்டது. மன்னராட்சிக் காலத்தில் வெற்றி பெற்ற அரசுகள் தோல்வியடைந்த அரசினை எவ்வாறு சூறையாடுமோ அவ்வாறான வகையில் சூறையாடலை மேற்கொண்டது. விடுதலைப்புலிகளின் வங்கியில் இருந்த நகைகள் பணம் தொடக்கம் இயக்கத்தின் அனைத்து சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன. விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களின் சொத்துக்களாகும். அவை அனைத்தும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை போதாக்குறைக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த வியாபாரிகளும் கொள்ளையிட அனுமதிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நிலங்கள் அனைத்தையும் படையினர் கைப்பற்றியிருந்தனர். வீடுகளை தங்களது உடமையாக்கினார். இவற்றுக்குப் புறம்பாக சொந்தக் காணிகளையும் கைப்பற்றி உடமை கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு தமிழ் மக்களின் நிலத்தையும் சொத்தையும் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் மிகவும் கவனமாக இருந்தனர். மரங்கள் கன்டபடி வெட்டுவது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் போர் முடிவடைந்தது தென் இலங்கையில் இருந்து வந்தவர்கள் காட்டு மரங்களை கண்டபடி தறித்துச் சென்றனர். மணல் கொள்ளை மண் கொள்ளை என்பனவும் வகை தொகையின்றி இடம்பெற்றது. இப்பச்சைசூறையாடலுக்கு புறம்பாக தமிழ் தேசத்தை தாங்கும் தூண்களாக இருந்த நிலம் மொழி பொருளாதாரம் கலாச்சாரம் என்பவற்றின் அழிப்பு திட்டமிட்ட வகையில் கிரமமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கில் நிலப்பறிப்பு பூர்த்தியாகிய நிலையில் தாயக இணைப்பின் இன்னோர் மையமாகவும் கேந்திரப்பிரதேசமாகவும் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டமும் வவுனியா வடக்குப் பிரதேசமும் குறிவைக்கப்பட்டது. நெடுங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவில் மருதோடைக்கு அப்பால் இருக்கும் வெடிவைத்த கல்லு கொக்கச்சா குளப்பிரதேசங்களில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர். தற்பொழுது மாகவலி வலயம் என்ற பெயரில் குடியேற்ற முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. இது முழு முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கியுள்ளதாக வளர்கின்றது. இது தவிர து வலயம் மு வலயம் என்பவற்றை அமைக்கும் முயற்சியும் இடம் பெறுகின்றது. இவை பூர்த்தியாகுமானால் முழு வன்னிப் பிரதேசம் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கக்கூடிய அபாய நிலை தோற்றம் பெற்றுள்ளது. இக் குடியேற்ற செயற்பாடு தொடர்பாக வனபரிபாலன திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் பௌத்த கலாச்சார அமைச்சு தொல்பெருள் திணைக்களம் அநுராதபுர மாவட்ட செயலகம் என்பவற்றின் கூட்டிணைவுடன் முப்படையினரின் ஒத்தழைப்புடன் சிங்கள மயமாக்கலை மேற்கொண்டு தமிழ் இன அழிப்பை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீ லங்கா அரசின் நில ஆக்கிரமிப்பை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் கட்டுப்படுத்தி நிலத்தை பாதுகாத்தது. இது 2009ம் ஆண்டில் 146000 இற்கு அதிகமான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து ஆயுதப் போராட்டம் மௌனமாக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ லங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை இலகுபடுத்தியுள்ளது. சிங்கள பேரினவாதம் கல்வி ரீதியிலும் ஆக்கிரமிப்பை மேற்கொள்கின்றது. இதற்கு முதற்பலியானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தான் இன்று கலைப்பீடத்தைத் தவிர ஏனைய துறைகளில் குறிப்பாக சட்ட முகாமைத்துவ விஞ்ஞான மருத்துவ பொறியியல் பீடங்களில் சிங்கள மாணவர்களே அதிகமாக உள்ளனர். தமிழ் சமூகத்தின் சிந்தனைப் பள்ளியாக இருக்க வேண்டிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தையும் சிங்கள பேரினவாதம் விட்டு வைக்கவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்திலும் இதே நிலை தான் இது சிங்கள் பேரின வாதத்தின் தமிழ் இன அழிப்பின் ஒரு பகுதியாகும். அகரீதியான சிதைப்பில் முதலாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடாகும் 2009 இற்க்கு பின்னர் தமிழ் மக்கள் பின்பற்றிய தமிழ் தேசிய அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலுக்கு சென்றது. இதற்கான நிகழ்ச்சி நிரலை சிங்கள பேரினவாதம் சர்வதேச பூகோள இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி 2009 இல் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இனப்படுகொலை செய்து இல்லாமல் அழித்ததோ அவ்வாறுதான் தமிழ் தேசிய அரசியலையும் இல்லாமல் செய்தது.
அதாவது தமிழ் மக்களை சிங்கள தேசத்திற்க்கு அடிமையாக்கி தங்களுடைய சுயநல அரசியலை நடாத்தும் கருணா, பிள்ளையான், டக்கிளஸ், அங்கயன், விஜயகலா, வியாழேந்திரன், சுரேன் ராகவன் போன்றவர்களின் வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசியத்தை கைவிட்டு இனக்க அரசியலுக்கு சென்றதுதான் தமிழ்தேசிய அரசியலின் நெருக்கடிக்கு மிகப்பெரும் காரணமாகியது. இதுவும் ஸ்ரீ லங்கா அரசின் தமிழ் இன அழிப்பை வீரியத்துடன் மேற்கொள்வதற்க்கு இலகுபடுத்தியுள்ளது. மேலும் சிங்கள தேசம் பூகோள அரசியல் இராஜதந்திரத்தின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி தமிழர் தாயக வடக்கு கிழக்கு இணைப்பு கைவிடப்பட்டு ஒற்றை ஆட்சி நாடு என்ற சிங்களத்தின் கொள்கையை ஒருமித்த நாடு என்ற போர்வைக்குள் சிங்கள பௌத்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு முயற்சித்து வருகிறது. இவ்வாறு தமிழ் இன அழிப்பை சிங்கள இனவாதிகளும் ஸ்ரீ லங்கா அரசும் மிகவும் திட்டமிடலுடன் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?