முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 670 அந்த விடயத்தில் நம்ப முடியாத மனிதர்களா?

புகார் கொடுக்க வந்த பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி!
புகார் கொடுக்க வந்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து கற்பழித்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வீரேந்திர பாபு என்பவர் அறிமுகம் ஆனார். அவர் அந்த பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டாலும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், வீரேந்திர பாபு மீது புகார் அளிக்க கொடிகேஹள்ளி பொலிஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவிடம் புகார் அளித்தார். புகார் கொடுக்க வந்த பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி! | The Police Officer Raped Woman Came To Report அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று கொண்ட ராஜண்ணா, அவருக்கு அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் ராஜண்ணா, அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தார். பின்னர் அங்கிருந்த அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண், துணை பொலிஸ் கமிஷனர் லட்சுமி பிரசாத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி எலகங்கா பொலிசாருக்கு அவர் உத்தரவிட்டார். எலங்கா பொலிசார் வழக்குப்பதிவு செய்து ராஜண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பொலிஸ் நிலையத்தல் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், ராஜண்ணா மீது லஞ்ச குற்றச்சாட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?