வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம்
ஆஸ்திரேலியர்களுக்கான வேலை மற்றும் பராமரிப்புப் பொறுப்புகளை சிறப்பாக கொண்டுநடத்த உதவும் தொடர் சீர்திருத்தங்களை, ஒரு செனட் குழு பரிந்துரைத்துள்ளது.
Woman using a laptop in office
The model of a four-day work week has been successfully trialled at companies in Australia and overseas. Source: Getty / Morsa Images
KEY POINTS
ஆஸ்திரேலியர்களுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல சீர்திருத்தங்களை செனட் குழு முன்மொழிந்துள்ளது.
அரசின் ஆதரவுடன், வாரத்தில் நான்கு நாள் வேலை என்பது, இச்செனட் குழுவின் முன்மொழிவுகளில் ஒன்றாகும்.
ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பை 52 வாரங்களாக அதிகரிப்பது மற்றும் கணிக்கக்கூடிய, நிலையான roster ஆகியவை பிற பரிந்துரைகளில் அடங்கும்.
Four-day working week- நான்கு நாள் வேலை வாரத்தை ஆஸ்திரேலியாவில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்துமாறு, நாடாளுமன்ற செனட் குழு ஒன்று, அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் ஒரு பணியாளரின் வேலை மற்றும் வாழ்க்கையை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை கண்டறிய முடியுமென அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி "100:80:100" மாதிரியின் அடிப்படையில், வாரத்தில் 80% வேலை செய்தாலும், தொழிலாளர்கள் தங்கள் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளும் அதேநேரம், தமது வேலைத்திறனை உரியமுறையில் பேணும்வகையில், இந்த பரீட்சார்த்த முயற்சியை ஆஸ்திரேலிய அரசின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Advertisement
பல்வேறு தொழிற்துறைகளுக்கான இப்பரீட்சார்த்த முயற்சியை, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் வேலை என்ற திட்டமானது, ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சில நிறுவனங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இப்பரீட்சார்த்த திட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள், மேம்பட்ட உற்பத்தித்திறன், வேலை-வாழ்க்கை சமநிலை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் அதிகரிப்பைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
READ MORE
வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியாவிலும் பரீட்சார்த்த முயற்சி!
இலாப நோக்கற்ற அமைப்பான Momentum Mental Health, 100:80:100 மாதிரியை நேர்மறையான முடிவுகளுடன் சோதித்து வருகிறது.
சுருக்கப்பட்ட வேலை வாரமானது, நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மற்றும் அதன் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளது என, குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, Deborah Bailey தெரிவித்தார்.
நான்கு நாட்கள் வேலை என்பது தவிர, paid parental விடுப்பை 52 வாரங்களாக அதிகரிக்கும் பரிந்துரையையும் செனட் குழுவின் அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
குழந்தை பராமரிப்பு, ஊனமுற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் நிலையான rosterக்கான உரிமை ஆகியவற்றையும் இக் குழு பரிந்துரைத்துள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்