முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 709 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 2 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 2 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை?
சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்லூரிகள், வட இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து புதிய மாணவர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளன. 2023-03-29_16-24-26.jpg Australian universities block international student visa applications from Punjab and Haryana states in north India. Source: Supplied வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விண்ணப்பங்களை, சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக தடை செய்துள்ளமை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாணவர் விசா விண்ணப்பங்களை முழுமையாக தாக்கல் செய்யாமை, மற்றும் மோசடியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு நிராகரிக்கும்போக்கு அதிகரித்துள்ளதையடுத்து, சில பல்கலைக்கழகங்கள் இத்தற்காலிக தடையை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. மெல்பனை தளமாகக் கொண்ட Torrens பல்கலைக்கழகம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து எந்த நேரடி விண்ணப்பங்களையும் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவித்துள்ளது. Advertisement இந்தியாவில் உள்ள தமது முகவர்களால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே தாம் பரிசீலிப்பதாக, குறித்த பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் SBS Punjabi-இடம் கூறினார். இது ஒரு நியாயமான அணுகுமுறை எனவும், இந்த பிராந்தியங்களில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து அவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டால், எதிர்கால விசா விண்ணப்பங்கள் பாதிக்கப்படலாம் எனவும், குறித்த மாநிலங்களிலிருந்துவரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம், மாணவர்களுக்கு நீண்டகால அபாயங்களைக் குறைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக்கழகம், பிப்ரவரி 15 அன்று தனது முகவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்து இளங்கலைப் படிப்புகளுக்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கும் மின்னஞ்சல், SBS Punjabi-இன் பார்வைக்குக் கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றமை மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் SBS Punjabi கேள்வி எழுப்பியபோது Edith Cowanஇன் துணைத் துணைவேந்தர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த கரந்தீப் சிங் என்ற மாணவர், அடிலெய்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரவென, 9 ஜனவரி 2023 அன்று மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்தார். அவர் தனது 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்த அதேநேரம், IELTSஇல் மொத்தம் ஏழு bands பெற்ற பின்னரே மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவரது ஆஸ்திரேலிய கனவு தடைப்பட்டது. தற்போது வேறு நாடுகளில் தனது மேற்படிப்பைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார். இப்படியாக விசா நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக குடிவரவு முகவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். Study gap, financial capacity மற்றும் ஆங்கில மொழித் திறமை குறித்து போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போக்கு, குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டமையே இதற்கான முக்கிய காரணம் எனவும், தமது நற்பெயர் மற்றும் தரவரிசை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விசா நிராகரிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழங்கங்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் இந்தப் போக்கு காரணமாக, உண்மையிலேயே தகுதிவாய்ந்த மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும், இத்தடையை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் நீக்க வேண்டுமெனவும் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?