முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 698 யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்;

யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; வெளியான பின்னனி!
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன அங்குள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; வெளியான பின்னனி! | Children S Home Office Beaten Up In Jaffna சிறுவர் இல்லத்தின் விடுதி காப்பாளராக நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் , அங்கு வந்த சில மாதங்களிலேயே விடுதி முகாமையாளராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். பதிவு உயர்வு பெற்ற பின்னர் , சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை உடல் ரீதியாக கடுமையான தண்டனைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது. திறப்பினால் ஒரு சிறுவனுக்கு தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியமை , சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்ததாகவும் கூறப்படுகின்றது. அவரது கொடுமைகள் தாங்காது விடுதியை விட்டு தப்பியோடிய சிறுவனை தாயார் மீள இல்லத்தில் ஒப்படைக்க வந்த போது , தாயாருடன் அநாகரிக வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிர்வாகத்தினருக்கு கிடைத்துள்ளது. மாணவர்களை தூண்டி வன்முறை இதனை அடுத்து நிர்வாகத்தினர் முகாமையாளரான குறித்த இளைஞனை பதவி நீக்கம் செய்துள்ளனர். வேலையை விட்டு நிர்வாகம் நீக்கிய போதிலும் , இல்லத்தில் இருந்து வெளியேற அவர் மறுத்துள்ளார். இதன் காரணமாக பொலிஸார் ஊடாக நிர்வாகத்தினர் நீதிமன்றை நாடியுள்ளனர். அதனை அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று கட்டளையிட்டதை அடுத்து இல்லத்தில் இருந்து தான் வெளியேறும் போது அங்கிருந்த சில மாணவர்களை தூண்டி வன்முறைகளை தோற்றுவித்துள்ளார். யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; வெளியான பின்னனி! | Children S Home Office Beaten Up In Jaffna அவரது தூண்டுதலால் அலுவலகத்தையும் இல்ல விடுதிகளின் சில பகுதிகளையும் அடித்து உடைக்க வைத்ததாக நிர்வாகத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். அதேவேளை குறித்த நபர் சிறுவர்களை உடல் ரீதியாக மோசமாக துன்புறுத்துகின்றார் என பல தடவைகள் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் முறையிட்ட போதிலும் , குறித்த அதிகாரி அவருடன் நட்பு பாராட்டி அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்ற நடவடிக்கை இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை வீணடிக்க விரும்பாத நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களை மாத்திரம் வேறு இல்லங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கோரியுள்ளதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்ற பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாது. அது தொடர்பில் தாம் நீதிமன்றுக்கு அறிவிப்பதாகவும் , நீதிமன்றின் ஊடாக சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மற்ற நடவடிக்கை எடுக்கிறோம் எனவும் பொலிஸார் நிர்வாகத்தினரிடம் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?