முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 985 தீர்வு விடயம் தொடர்வாக எந்த தீர்வையும் தமிழர்களிற்கு வளங்க இந்தியா முன்வராது,

இந்தியாவின் நிலைப்பாடு இதுதான் இலங்கையில் உள்ள சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ பொருளாதாரரீதியாக வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது, இந்த உன்மையை இலங்கையில் உள்ள சாதாரண மக்களிற்கு தெரியப்படுத்துவதின் ஊடாக இனங்களிற்கு இடையே ஆன முறன்பாட்டைதீர்க்க முடியும்,
அதன் பின்னர் சமஸ்ட்டி என்ற தீர்வு சாத்தியப்படும என்பதை அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வு முறை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி | Political Solution Tamil People India Tna 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுவத்துவதாக இருந்தாலும் அதனைச் செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல. அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஐ.நா தீர்மானம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி | Political Solution Tamil People India Tna ஐ.நாவில் நிறைவேற்றப்படப் போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படிச் செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைபு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளோம். எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள். கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?