முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c974 மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்.

மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம்
ரஷ்ய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களின் உறுதியான அடையாளமாக மூன்றாவது மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் இரண்டு புதை குழிகளும் போரின் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டாலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்ட மூன்றாவது புதைகுழி மிகவும் மோசமான புதைகுழி என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உக்ரைன் இராணுவம் வெளியிட்ட அறிக்கை மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம் அம்பலம் | Mass Burial Site Found In Ukraine Izyum Russia War உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா கைப்பற்றிய பல இடங்களை தற்பொழுது உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார். அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் ரஷ்ய படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இவை என உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரின் கருத்து மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம் அம்பலம் | Mass Burial Site Found In Ukraine Izyum Russia War இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, " ரஷியா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம். மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷியப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். இசியம் நகரில் மிகப்பெரிய குழியில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினர் கொன்று குவித்துள்ளனர். ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம். கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது", எனக் குறிப்பிட்டார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?