நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று ஆரம்பித்த 51ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் முன்னாள் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒரு நாட்டின் முன்னாள் தலைவர்கள் மீது பொருளாதார குற்றங்கள் சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜபக்சக்களுக்கு எதிராக ஐ.நாவில் பாரிய குற்றச்சாட்டு
நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva
சிறிலங்கா தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை நேற்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் பிரான்சில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து கேக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கையர்கள் முறைப்பாடு
நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva
இவ்வாறான நிலையில், இலங்கை மக்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, இந்த மூவரும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நாட்டில் அராஜகச் சூழல் ஏற்பட்டு விலைவாசி உயர்வடைந்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளரிடம் பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்