நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று ஆரம்பித்த 51ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் முன்னாள் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒரு நாட்டின் முன்னாள் தலைவர்கள் மீது பொருளாதார குற்றங்கள் சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜபக்சக்களுக்கு எதிராக ஐ.நாவில் பாரிய குற்றச்சாட்டு
நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva
சிறிலங்கா தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை நேற்று மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் பிரான்சில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து கேக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கையர்கள் முறைப்பாடு
நாட்டில் அராஜக சூழல் ஏற்பட்டதற்கு இவர்களே காரணம் - ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் சிக்கிய ராஜபக்சக்கள்! | Sri Lanka Economic United Nation Rajabaksha Geneva
இவ்வாறான நிலையில், இலங்கை மக்கள் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது, இந்த மூவரும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நாட்டில் அராஜகச் சூழல் ஏற்பட்டு விலைவாசி உயர்வடைந்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளரிடம் பெருமளவான இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்