முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 11 இனங்களிற்கு இடைய முறுகலை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகள்,

வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (22-09-2022) பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு கூடி நின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது தொலைபேசியையும் பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சகோதர முஸ்லிம் இன குழுவினராலேயே தாக்குதல் நடத்தப்பட்டதுடன், படுகாயமடைந்தவர் தமிழ் இளைஞன் ஆவார்.
இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர். குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞரும், சகோதர முஸ்லிம் இன பெண் ஒருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே இடத்தில் பணியாற்றியதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் இருந்துள்ளதாகவும், அதன் தொடர்சியாக குறித்த பெண்ணை சந்திக்கச் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற போதே தமிழ் இளைஞன் பெண்ணின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia மேலும், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிடச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?