முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 956 திலீபன்தாகம் தீரவில்லை

திலீபன் போராட்ட காலத்தில் தனியே ஆயுதம் ஏந்திய போராளியாக மட்டும் நிலைபெறவில்லை.
அந்நேரத்தில் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார். ‘களத்தில்’ என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர். விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து எண்பதுகளில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியராக திலீபன் பணியாற்றினார். யாழ்ப்பாணக் கோட்டை இதே நாளில் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தது எப்படி? தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் “களத்தில் பிரகடனம்” ஒரு முக்கியமான பதிவாகும். அதாவது அந்த நேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஜே.ஆர் அரசுக்கும் இடையில் நிகழந்த பேச்சுவார்த்தைகளின்போது மாகாண சபை உருவாக்கம் சம்மந்தமான விடயங்கள் பேசப்பட்டன. அவற்றை புலிகள் மறுப்பதாக ஒரு பிரகடனம் களத்தில் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் திலீபன் எழுதியிருந்தார். “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என்பதே. புலிகளின் குரலாய் திலீபன் எழுதிய இந்த பிரகடனம்தான் பின்வந்த போராட்ட காலங்களில் தனி நாட்டுக்கான முழு வீச்சுப்பெற்ற தாக்குதல் அணிகளைக் கட்டமைக்கும் மூலோபாயங்களைக் கொடுத்தது. அந்த வகையில் திலீபனின் “களத்தில் பிரகடனம்” சிறப்பு வாய்ந்ததெனலாம். அன்றைய நாட்களில் யாழ்ப்பாணக் கோட்டை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ் நகரமே குண்டு மழையால் சிதைந்துகொண்டிருந்தது. கோட்டைக்கு வெளியில் வந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் இராணுவம் சுட்டுத் தள்ளியது. இதன்போதுதான் கோட்டை இராணுவ முகாம் அழிக்கப்படவேண்டும் என்ற தேவை உணரப்பட்டு கோட்டை மீதான முற்றுகைச் சமர் தளபதி கேணல் கிட்டு தலைமையில் ஆரம்பமானது. யாழ்ப்பாணக் கோட்டை போரியல் அடிப்படையில் முற்றுகைக் கென்று பெயர்போன ஒரு கோட்டையாகும். முதன் முதலில் போர்த்துக்கேயர்களை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் அவர்களை நிர்வாணப்படுத்தியே வெளியேற்றினர். பின்னர் ஒல்லாந்தரை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அவர்களது ஆயுதங்கள் அனைத்தையும் பிடுங்கிவிட்டே வெளியேற்றி அதன்பின் கோட்டை இலங்கை இராணுவத்தின் கைகளில் வந்தது. யாழ்ப்பாணக் கோட்டையின் அமைவிடம் என்பது நன்கு திட்டமிட்ட ஒன்றாகும். மூன்று பக்கம் நிலத்தாலும் ஒரு பக்கம் கடலாலும் சூழப்பெற்றது. முற்றுகை ஒன்று வரும்போது கடல் மார்க்கமாகத் தப்பி விடுவதே நோக்கம். கிட்டு தலைமையில் கோட்டை முற்றுகையிடப்பட்டபோது கடல்மார்க்கத்தை தடை செய்யவில்லை. (முன்னைய முற்றுகைகளில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் நாற்புறங்களையும் தடைசெய்தே முற்றுகையிட்டனர்.) அப்போது கோட்டை இராணுவ முகாமின் தளபதியாக இருந்தவர் கப்டன் கொத்தலாவல. கோட்டை நிலப்பக்கத்தால் மூடப்பட்டாலும் கடல்மார்க்கமான தொடர்பு இராணுவத்திற்கு இருந்தது. ஆனால் அது திருப்திகரமானதாக இருக்கவில்லை. இது இராணுவத்தினரை உளவியல் ரீதியில் பெரும் தாக்கத்திற்கு உட்படுத்தியிருந்தது. கோட்டை முற்றுகை என்பது கோட்டை இராணுவ முகாமைக் கப்பற்றும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்டதல்ல. அங்கிருந்த இராணுவத்தின் வெளிப் பிரசன்னத்தை அடக்குவதேயாகும். கேணல் கிட்டு ஓர் சிறந்த தொடர்பாடல் திறனுள்ள தளபதி என்பதற்கு எடுத்துக்காட்டு கோட்டை இராணுவ முகாமின் தளபதி கொத்தலாவலக்கும் கிட்டுவுக்கும் இடையில் நிகழ்ந்துவந்த கைதிகள், சடலங்கள் பரிமாற்றம்தான். ஒருபக்கம் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டாலும் இரு பக்கத் தளபதிகளும் கைலாகு கொடுத்துவந்தனர். இது நிகழ்ந்தது கோட்டைக்கு வெளியே முற்றவெளியிலாகும். கப்டன் கொத்தலாவல புலிகள்மீது நம்பிக்கை வைத்து துணிவோடும் வெளியே வந்து கிட்டுவோடு கைலாகு செய்வது கிட்டு மீது கொண்ட நம்பிக்கையின் மூலமே. இந்த சந்திப்புக்கள் நிகழ்ந்தமை இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரணதுங்கவின் (சந்திரிகாவின் கணவர்) யாழ்ப்பாண கோட்டை விஜயத்தினையடுத்தேயாகும். கோட்டை முற்றுகையின் பின்னரும் இராணுவத்தின் ஷெல்மழை அச்சுறுத்திக்கொண்டுதான் இருந்தது யாழ் நகரை. திலீபன் உண்ணாவிரத மேடையில் கோட்டை அழித்துக் கைப்பற்றப்படவேண்டும் அங்கு எமது படை நிலைகொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். மாறி மாறி அந்நியர்களால் ஆளப்பட்ட யாழ் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்குதோ அன்றுதான் எம் தேசத்தின் விடியல் பயணமும் ஆரம்பமாகும் என்ற ஆழமான சிந்தனையை முன்வைத்தார். திலீபனின் மறைவுக்குப் பின்னர் 1990 மே மாதமளவில் தலைவர் பிரபாகரனின் உத்தரவின்பேரில் யாழ் மாவட்டத் தளபதி பானு தலைமையில் கோட்டை மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியது. புலிகளின் சுய தயாரிப்பு பீரங்கியான பசீலன்-2000 என்ற ஐம்பது கிலோ எடைகொண்ட குண்டுகள் கோட்டை மதில்களைத் தகர்த்துக்கொண்டிருந்தமை கண்டு முகாமில் இருந்த இராணுவம் கதிகலங்கிப் போனது. கிட்டுவின் முற்றுகை போலவே பானுவின் முற்றுகையும் அமைந்தது. கடல் மார்க்கம் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து நான்கு மாதம் நடந்த முற்றுகையினைத் தொடர்ந்து கடல் மார்க்கமாக தப்பியோடியது இலங்கை இராணுவம். கோட்டை புலிகள் வசம் வீழ்ந்தது. திலீபனின் கனவை தளபதி பானு நிறைவேற்றி வைத்தார். கோட்டையில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; அதுவும் திலீபன் ஈகையாகிப்போன இதே நாளில்! பார்த்திபன் இன்னும் பசியுடன் தான் இருக்கிறான். .. Related

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,