முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 960 ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா?

ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96. இந்நிலையில் அவர் 5 வயது முதலே எடுத்துக்கொண்ட உணவுபற்றி, பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச சமையலறை சமையல்காரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூற்றுப்படி, ராணி எலிசபெத், பெரும்பாலும் வீட் பிரெட் மற்றும் ஜாம் உள்ளிட்ட லைட்டான உணவையே அதிகம் எடுத்துக் கொள்வாராம். பிரெட் அவருக்கு மிகவும் பிடித்த உணவாம். ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை! | Queen Elizabeth Favorite Food பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிடித்த உணவில் இவ்வளவு ஆபத்தா? பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர். உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை! | Queen Elizabeth Favorite Food
அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும். கார்போஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும்போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம். பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?