முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 9ஆரம்பத்தில் இந்த விடயத்தை தட்டிக்களித்து விட்டு ஒற்றை ஆட்சிக்கு தலையாட்டிய கூட்டம்,

தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம்
பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளே முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள், மனித உரிமைப் பேரவை பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில், 22 செப்டம்பர் 2011 புதன்கிழமை அன்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தர்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ந. சிறீகாந்தா ஆகியோர் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவை வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தமிழர் தரப்பின் கோரிக்கை உதாசீனம் தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் | Un Sri Lanka Issue Icc Letter Tamil Leaders குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம் தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி வைத்திருந்த போதிலும், வெளிவந்திருக்கும் மாதிரிப் பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையும் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டுமென்ற விடயமும் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அழிவுகளுக்கான அனுபவத்தை கொண்டவர்கள் நாம். சர்வதேச சமூகத்தின் செயலற்ற நிலையினால் நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் முகமாக மனித உரிமைப் பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணையில் நமது கோரிக்கைகள் உள்ளடக்கப் படாமல் இருப்பதை அவதானிக்கிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் | Un Sri Lanka Issue Icc Letter Tamil Leaders இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை மாத்திரமல்லாமல் ஐ.நா உயரதிகாரிகளின் பரிந்துரைகளையும் உதாசீனம் செய்யாது சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை பாரப்படுத்தும் எமது பிரதான கோரிக்கையை உள்ளடக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?