முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 632 முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு

 

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு | Indian Government Refuses Send Murugan To London
 By Sumithiran 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோா் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா்.

லண்டனில் வசிக்கும் மகளுடன் சோ்ந்து வாழ 

இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புவதால், கவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று வருவதற்கு பாதுகாப்பு வழங்க, சென்னை காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தாா்.


இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் முன்னிலையாகி, கொலை வழக்கில் குற்றவாளியான இலங்கையைச் சோ்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தாா்.

இந்த வருடத்தில் ஆசியாவில் மிகவும் பிரபலமானவர் யார் தெரியுமா..!

இந்த வருடத்தில் ஆசியாவில் மிகவும் பிரபலமானவர் யார் தெரியுமா..!

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு

தமிழக அரசு தரப்பில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முருகனை அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், முருகனுக்குப் பயண ஆவணம் வழங்குவதற்கான நோ்காணலுக்கு இலங்கை தூதரகம் அழைக்கும்போது, முருகனுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு | Indian Government Refuses Send Murugan To London

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?