முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 670 முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

 

முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி | Preparations Tsunami Commemoration In Mullaithivi
 By Beulah 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24.12.2004 சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்களினுடைய நினைவு நாள் நாளைய தினம்(26) மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்கள் புதைக்கப்பட்ட இடமான புதுக்குடியிருப்பு பகுதியிலும் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலும் கள்ளப்பாடு உதயம் விளையாட்டு மைதானத்திலும் நாளை காலை சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

நினைவேந்தல் நிகழ்வுகள் 

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலே நாளை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள நினைவேந்தல் நிகழ்வில், 08.00 மணிக்கு இந்து மத வழிபாடும் 8.15 க்கு முஸ்லிம் மத வழிபாடும் 8:30க்கு கத்தோலிக்க மத வழிபாடும் அத்துடன், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற உள்ளது.


இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்கள் புதைக்கப்பட்ட இடமான புதுக்குடியிருப்பு பகுதியிலும் காலை 08.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாக உள்ளது.

கள்ளப்பாடு உதயம் விளையாட்டு மைதானத்திலும் நாளை காலை 08.00 மணிக்கு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

அனைவருக்கும் அழைப்பு

இந்த நிகழ்வுகளில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற அதே வேளையிலே வழமை போன்று மாலை வேளையில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளின் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட இடமாகிய முள்ளியவளை கயட்டை பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றது.

முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி | Preparations Tsunami Commemoration In Mullaithivi

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டிருக்கும் நிலைமையில் தங்களுடைய உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?