தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)
நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீடு ஒன்றினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவசர காவல்துறையினருக்கு பலமுறை அழைப்பு ஏற்படுத்தி அறிவித்தும் அவர்கள் வருகை தரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் குறித்த நபர் மேலும் தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளார்.
இதனையடுத்து ஒட்டுசுட்டான் காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்