யாழ் நினைவு தூபி விடையம் பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எப்படி ?
யாழ் பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பு விடையம், கொழும்புல் உள்ள பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை தீவே கொரோனா கொடூரத்தில் ஆட்டம் கண்டுள்ள நிலையில். போதாக் குறைக்கு மழை வெள்ளம் என்று அல்லாடி வரும் நிலையில். ஏன் முள்ளிவாய்க்கால் தூபியை இடிக்க வேண்டும் என்பது, முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்க தூதரகம், இந்திய (யாழ்) தூதரகம், இங்கிலாந்து என்று பல தூதரகங்கள் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோட்டபாயவின் செல்வாக்கு தென்னிலங்கையில் வெகுவாக சரிந்து வருகிறது. பால் தொடக்கம் பாணின் விலை சொல்ல முடியாத அளவு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கான எந்த ஒரு சரியான நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. சிங்களவர்கள் பெரும் அதிருப்த்தியில் உள்ளார்கள். ஏன் கோட்டாவுக்கு வாக்கு போட்டோம் என்ற நிலையில் அவர்கள் இருக்கும் போது. எதில் கை வைத்தால் தமிழர்கள் பொங்கி எழுவார்களோ. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பொங்கி எழுவார்களோ அதில் கோட்டா கை வைத்தார்.
அது தான் நினைவுத் தூபி. தமிழர் பகுதியில் வெடிக்கும் போராட்டங்களை சிங்கள பகுதிக்கு போட்டு காட்டி புலிகள் மீண்டு விட்டதாக பூச்சாண்டி காட்டி. குறைந்த தனது செல்வாக்கை அதிகரிக்க போட்ட திட்டம் இந்த நினைவு தூபி இடிப்பு. ஆனால் முஸ்லீம்களாலும் சில நல்ல உள்ளம் கொண்ட சிங்களவர்களாலும் தவிடு பொடியாகிவிட்டது இந்த திட்டம். அது என்னவென்றால் இறந்த மக்களுக்காக கட்டப்பட்ட சின்னத்தை ஏன் அழிக்க வேண்டும் என்று, இம் முறை சிங்களவர்களே கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒருவரின் கல்லறையை உடைத்தால், உறவுகள் பார்த்துக் கொண்டு இருப்பார்களா ?
அவர்களுக்கு கோபம் வரும் தானே என்று சிங்களவர்களே கூற. நடந்த கடை அடைப்புக்கு முஸ்லீம் சகோதரர்கள் ஒட்டு மொத்த ஆதரவை தர. ஆடி விட்டார் கோட்டபாய. அவர் இதனை சற்றும் எதிர்பார்கவில்லை.
ஆனால் உலகத் தமிழர்கள் இதனை நன்றாக அறுவடை செய்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். எப்படி லக்ஷ்மன் கதிர்காமரை வைத்து புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்கிறார்கள். புலிகள் தற்கொலை படையை பாவிக்கிறார்கள் என்று கூறி. மேற்குலக நாடுகளிடம் இருந்து புலிகளை அன்னியப் படுத்தியது சிங்களமோ. இன்று அதே பாணியை கையில் எடுத்து, இறந்த மக்களின் கல்லறைகளை சிங்களம் உடைக்கிறது என்று கூறிய உலகத் தமிழர்களின் குரல், பல நாட்டு அரசாங்கத்தின் காதுகளில் விழுந்துள்ளது.
அமெரிக்கா கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவரை வைத்து முறையாக இச்சம்பவம் தொடர்பாக கேட்டு அறிந்து அறிக்கை தயாரித்துள்ளது. அது போல இந்தியா பிரித்தானிய தூதுவர்களும் இச் சம்பவம் தொடர்பாக தமது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்ற செய்திகள் வெளிநாட்டு அமைச்சு ஊடாக கசிந்துள்ளது. எனவே தற்போது கோட்டபாயவின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்து விட்டது. இவர் பருப்பு இனி வேகாது என்பதே உண்மை.
கருத்துகள்