முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 201

 ராஜபக்ச சகோதரர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகின்றது; மக்களுக்கு?



இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.

 

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க சற்று முன்னர் தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்பொழுது நடைபெறும் கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.


2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


முதலில் நாட்டின் தலைவர் அதாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வார்கள். இதன் மூலம் இந்த தடுப்பூசி தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். இந்த தடுப்பூசியின் மூலம் பெரும்பாலும் நாட்டு மக்களை இந்த கொடூர வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.


எமக்கு இருக்கும் வசதிகள் இதனை களஞ்சியப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்துள்ளமை அதிஷ்டமாகும். முதலில் உலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு களஞ்சியப்படுத்துவதற்கு குளிர்சாதன வசதி பெருமளவில் தேவை. தற்பொழுது நாம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிக்கு சர்வதேச சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்தியாவில் இருந்து நாளை கொண்டு வரப்படவுள்ள Oxford AstraZeneca தடுப்பு மருந்துக்கு எமது NMR நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மூன்றாம் கட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை 34% ஆகும் அதாவது 3.4 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக சீனா 70 இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ளது. இதேபோன்று ரஷ்யாவும் எமக்கு தடுப்;பு மருந்துகளை வழங்கவுள்ளது.


இந்த மருந்துகளுக்கான அங்கீகாரம் சர்வதேச ரீதியில் இன்னும் கிடைக்கவில்லை. இதேபோன்று எமது NMR நிறுவனம் இதுதொடர்பாக விரவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனம் எந்த தடையீடுகளும் இன்றி சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?