விடுதலைப்புலிகள் இல்லாட்டி தமிழரை காப்பாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்!
இலங்கையில் தமிழின மக்களுக்கு மட்டும் அடிப்படை உரிமைகள், தமிழின பாரம்பரியங்கள், அதுமட்டுமின்றி வாழ்வாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றதா?
கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாதிகளினால் தமிழ் மக்களின் நிலங்கள் சூறையாடப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடி புகுத்தப்பட்டன.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை தகர்த்து, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக சிங்கள காடையர்கள் வெறிகொண்டு செயற்படுகின்றனர்.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை காணிகளை சிங்கள இனவாதிகள் தொடர்ந்தும் அபகரித்து வருகின்றனர்.
இவர்களின் அடாவடித் தனத்தை தட்டிக் கேட்ட அதிகாரிகளையும் வேறு இடத்திற்கு மாறினார்.
அதுமட்டுமின்றி, அண்மையில் கால் நடை விலங்குகளை தேடிச் சென்ற 6 விவாசியிகளை கட்டிவைத்து அடித்துள்ளனர்.
இதையும் தாண்டி தற்போது வாயில்லா உயிரினங்களை கொன்று குவித்துள்ளனர்.
இத்தனை கொடுமைகளுக்கும் யார் நியாயம் தேடித் தருவார் என, பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் இதனை தட்டிக் கேட்பார்களா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியை தான் பெற்றுக் கொடுப்பார்களா? இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.மாட்டுக்கு நடந்த கதிதான் உங்களிற்கும் நடக்கும் என சொல்லாமல் சொன்ன சிங்களவர்கள்.
கருத்துகள்