நினைவுத்தூபி விவகாரம் ஐநா அமர்வில் நடவடி எடுக்கக்கூடியவாறு அழுத்தம் கொடுக்கவேண்டும் என சியோபென் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா தொழில் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் சியோ பெண் அம்மையார் இலங்கை தொடர்பில் பிரித்தானியா பாராளுமன்றில் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்படகூடியவகையில் மனிதத்துவத்துக்கும் எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக குற்றம் சுமத்துப்பட்டுள்ள நிலையிலும் பிரதராகவும் ஜனாதிபதியாகவும் பதவியில் இருக்கிறார்கள்.
அவர்கள் தமது சகாக்களை குறிப்பாக யுத்தக் கற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் உயர்பதவிகளில் ஏற்றிவைத்திருக்கின்றார்கள்.
இறுதியாகக் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாக்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி பலவந்தமாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடூர செயல் எனவும்-
சிறிலங்காவுக்கு எதிராக எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் நடபடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்