முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 190

 அன்புள்ள மகனுக்கு…! எங்களுக்கு எண்டொரு நாடு வேணுமடா தம்பி!…

10.02.1993



அன்புள்ள மகனுக்கு,


நீ நலமாயிருப்பாய் என நம்புகிறேன். நானும் இருக்கிறேன். நீ போய் கனகாலமாயிற்று. கப்பல் ஒழுங்காக வராதபடியால் உனது கடிதமும் ஒழுங்காகக் கிடைக்கிறதில்லை. இங்கே சாப்பாட்டுச் சாமான்களும் அப்படித்தான். சுய உற்பத்தி என்று சொல்லி நாங்களும் குரக்கன், மரவள்ளி என்று செய்யிறபடியால் தான் சமாளிக்கிறம்.


நீ முந்தி ஓடித்திரிந்த வெறும் வளவுக்குள்ளே இப்ப நிறைய சங்கங்கள் வந்திருக்கினம். அவையள் மாதகலிலிருந்தும், தீவிலிருந்தும் அகதியாக வந்தவையள். இந்த மழைக்குள்ளேயும், பனிக்குள்ளேயும் மரங்களுக்கு கீழேயும், சின்னச் சின்ன கொட்டில்களிலேயும், சாக்குகளை மறைப்புக்கு கட்டிக் கொண்டு சரியாக கஸ்ரப்படுதுகள். அரசாங்கம் ஒழுங்காக சாப்பாடு அனுப்பிறதில்லை. நிவாரணம் என்று சொல்லி இன்ஹ்கு குண்டுகள்தான் போடுது.

நீ சின்ன வயதில் படித்த பள்ளிக்கூடத்தின் மேலே சுப்பசோனிக் விமானக் குண்டு விழுந்து சரியான சேதம். உன்னப் படிப்பிச்ச செல்லத்துரை மாஸ்ரருக்கு உடம்பெல்லாம் காயம். எங்கட மூத்தண்ணையின் கடைசி மகனும் இன்னும் கொஞ்சப் பொடியளும் அதில் செத்துப்போட்டுதுகள். பாவம் மூத்தண்ணை, அவனை நம்பித்தான் இருந்தவர். இதோட தன்ரை மகளைக் கொண்டுபோய் இயக்கத்தில் சேர்த்துவிட்டார். இப்படி அநியாயமாக சாகிறதைவிட வீரமாகச் சாகலாம் என்று எனக்குச் சொன்னார்.


உன்னோட படிச்ச பொடியலெல்லாம் இப்ப இங்கே இல்லை. அரைவாசிப் பேர் வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள். மிச்ச அரைவாசிப்பேர் துவக்குத் தூக்கப் போய்விட்டார்கள். உன்னோட ஒன்றாக ரீயூடனுக்குப் போன முரளியை ஞாபகமிருக்கோ? அவன் போன கிழமை வந்தவன். இப்ப மணலாறில் நிக்கிறானாம். ஆனையிறவு சண்டையில் காயப்பட்டு ஒரு கால் இல்லை அவனுக்கு. அப்படியும் திரும்பவும் சண்டைக்குப் போகப் போறானாம். அண்டைக்கு நல்ல மழை. இங்கே வரேக்கை முழுக்க நனைஞ்சு வந்தான். நான் நீ விட்டுப்போன ரெயின் கோட்டை அவனுக்குக் கொடுத்து விட்டன். இந்தப் பொடியள் எல்லையில் மழையிலேயும், வெய்யிலேயும் நிக்கிறபடியால்தான் இங்கே உள்ள சனங்கள் நிம்மதியாக இருக்குதுகள்.

எங்கட பக்கத்து வீட்டு அன்னமாக்காவுடைய மகன் வளலாய் சண்டையில் வீரச்சாவடைந்து விட்டான். அவனது இறுதி நிகழ்ச்சிக்கு நானும் போனனான். மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அன்றுதான் முதல் முறையாக போனனான். உன்ரை அப்பு செத்ததுக்கு கூட இப்படி நான் அழேல்லை. இதை என்னவென்று எழுதுவது? வாழ வேண்டிய இந்தப் பிஞ்சு வயதுப் பிள்ளையள்……………….

நீ என்னை வரச்சொல்லி எழுதியிருக்கிறாய். இறுதிவரை இந்த மண்ணில் தான் வாழுறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்.

எங்களுக்கு எண்டொரு நாடு வேணுமடா தம்பி!

உன்ர சுகத்தைக் கவனி.

அடுத்த கடிதத்தில் சந்திக்கும்—



அன்புடன் – அம்மா.


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?