முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 498 உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நோய் பாதுகாப்பு இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்? தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும் வைத்தியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக்கு வரும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அடையாளம் காண விமான நிலையத்தில் தயார்படுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார். விமான நிலையத்தில் குரங்கு அம்மை தொற்றின் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கொரோனாவை போல பாதிப்பு ஏற்படுத்துமா? கொரோனா தொற்றுடன் ஒப்பிடும் போது இந்நோயின் பரவலானது ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும், நெருங்கிய தொடர்பின் மூலம் இந்நோய் இலகுவாகப் பரவக்கூடியது எனவும் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவை அடையாளம் காண பயன்படுத்தப்படும் வகையின் மரபணு பகுப்பாய்வு மூலம் நோயைக் கண்டறிய முடியும். குரங்கு அம்மை அறிகுறிகள் குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகள் முகம், கைகள் மற்றும் கால்கள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுவதுடன், வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் காய்ச்சல் காணப்படும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு தொற்றுநோய் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையிலும் பாதிப்பு ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து இலங்கைக்கு பரவும் பெரியம்மை வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் நாட்டில் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் மரபணு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் இருந்து இந்த நோய் பரவும் என்று அவர் வலியுறுத்துகிறார். சீழ் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும், அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுவது அவசியமானது எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார். தொண்ணூற்று இரண்டு குரங்கு அம்மை நோயாளர்கள் உலகளவில் பதிவாகியுள்ளனர், மேலும் இலங்கையில் இன்றுவரை எந்த நோயாளர்களும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?