முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 515 கொலை செய்தார்களாதிடுக்கிடும் தகவல்?

ரத்தத்தை மாற்றிக் கொடுத்து இந்த 13 வயது சிறுமியைக் கொலை செய்த யாழ் மருத்துவர்கள்: பெரும் நாடகம் அம்பலம் !
இன்றைய தினம்(28) இலங்கை நேரப்படி மதியம் 12 மணிக்கு, நிலாகினி இறந்து விட்டதாக யாழ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 2018ம் ஆண்டு நிலாகினிக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அன்று முதல், ஒரு வருடத்தில் 2 அல்லது 3 முறை அவருக்கு ரத்தம் ஏற்றுவது வழக்கம். மிகவும் துடி துடிப்பாக நல்ல தேக ஆரோக்கியத்தோடு அவர் இருந்து வந்தார். சமீபத்தில் தான் பெரியபிள்ளையாகியும் இருந்தார். கடந்த 23ம் திகதி, ரத்தம் ஏற்ற என, வழமைபோல யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் உடனே, அவருக்கு காச்சல், வாந்தி, மற்றும் வலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை சாதாரண வார்டில் வைத்திருந்த மருத்துவர்கள், பனடோலை கொடுத்துக் கொண்டு 5 மணி நேரம் வைத்திருந்துள்ளார்கள். பின்னரே அவரை ICU வார்டுக்கு மாற்றி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக ரத்தத்தை மாற்றிக் கொடுத்தால் தான், இப்படி எல்லாம் வரும் என்பது மருத்துவர்களுக்கு தெரியாத விடையமா ? இது உயிரைப் பறிக்கும் விடையம் அல்லவா ? ஆனால் அவர்கள் அசண்டையீனமாக இருந்துள்ளார்கள். ரத்தத்தை ஒருவர் உடலில் மாற்றி(வேறு குரூப்) ஏற்றினால் முதலில் ஒவ்வாமை தோன்றும். அதனால் காச்சல் வரும் பின்னர் உடல் முழுவது எரிவது போல இருக்கும். அதனை தாங்க முடியாது. பின்னர் ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியாக ஆரம்பிக்கும். இதனால் ஆக்சிஜன் உடல் பாகங்களுக்கு செல்வது குறைவடையும். மூளைக்கு ஆக்சிஜன் செல்லும் அளவு குறைந்து விட்டது என்றும். மூளை வீங்கி விட்டது என்றும் கூறி நாடகம் ஆடியுள்ளார்கள் மருத்துவர்கள்.. சிறுமி நிலாகினி கோமா நிலைக்கு சென்றுவிட்டார். நரம்பியல் மருத்துவர் என்று ஆதித்தியன் மருத்துவரை அழைத்த யாழ் வைத்தியர்கள். தாம் ரத்தத்தை மாற்றிக் கொடுத்ததை மறைக்க, நரம்பியல் நோயாக மாற்றி. மருத்துவர் ஆதித்தியனை வைத்து நாடகம் ஆடியுள்ளார்கள். இது போக நேற்றைய தினம் சிறுமியின் முகத்தை ஈரச் சீலையால் துடைத்து விட்டு. அம்மா அப்பாவை அழைத்து சிறுமியைக் காட்டி. சிறுமியின் உடல் நிலை முன்னேறி வருவதாகவும். தமது மருத்துவம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது போலம் நாடகம் ஆடியுள்ளார்கள்.
ஆனால் சிறுமி இறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. அவர் மூளைச் சாவடைந்து விட்டார். செயற்கை சுவாசத்தை கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். சிறுமியின் ரத்த குறூப் B+. இந்த வகை ரத்தத்திற்கு பதிலாக வேறு குரூப் ரத்தத்தை மாற்றிக் கொடுத்து, யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள் ஒரு சிறுமியை கதறக் கதறக் கொலை செய்துள்ளார்கள் என்பதே அப்பட்டமான உண்மை. இந்த ஏழைக் குடும்பத்தின் இன்றைய நிலை..யார் இந்த மருத்துவர்களிடம் கேள்வி கேட்ப்பது ? எங்கே சென்று முறையிடுவது ? 1க்கு 7 வீடுகளை வைத்திருக்கிறார்கள் யாழில் உள்ள மருத்துவர்கள். பெரும்பாலான மருத்துவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வேலை செய்வதை விட பிரைவேட்டாக வேலை செய்வதே வழக்கம். சிலர் ஒரு நாளைக்கு மட்டும் 6 தொடக்கம் 8 லட்சம் ரூபா வரை சம்பாதிக்கிறார்கள்(கட்ராக்) ஆப்பரேஷன் செய்து. இங்கே முறையான பொலிஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும். யாழில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையம் இந்த விடையத்தில் அக்கறை எடுக்குமா ? துடி துடித்து இறந்து போன நிலாகினிக்கு ஒரு நீதி வேண்டும் அல்லவா . அதிர்வுக்காக கண்ணன்:

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?