முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

''c 526 கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்ல;

இலங்கை பொருளாதார நெருக்கடி: வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பிரதமர் அலுவலகம்
இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் இன்று, மே 31 வெளியிட்டது. பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை சொல்வது என்ன? விளம்பரம் அந்த அறிக்கையில், "2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி (PIT) மற்றும் பெருநிறுவன வருமான வரி (CIT) ஆகியவற்றின் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரித் தளங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள் (IT) மற்றும் செயல்படுத்தப்பட்ட சேவைகள், வரி விலக்குகள் மற்றும் வரி விடுமுறைகள் போன்ற ஏராளமான வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தும் போது இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் - 800 பில்லியன் வரி வருவாய் திறைசேரிக்கு (அரசு கருவூலம்) நட்டம் ஏற்பட்டது. எனவே, இந்தச் சீர்திருத்தங்கள், 2020 - 2021 இல் பரவிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய வளர்ச்சிகள் காரணமாக, அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்த கொள்கைகளாகக் கருதப்படுகின்றன. இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி - மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் விலகல் இலங்கை பொருளாதார நெருக்கடி: பல நாட்கள் நீடித்த போராட்டம் வலுவிழந்தது ஏன்? ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் உலகப்போரும் - இந்தக் கதை தெரியுமா? மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019 இல் 12.7 சதவீதத்திலிருந்து 2020 இல் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளது, மேலும் 2021 இல் 8.7 சதவீதமாக மோசமடைந்துள்ளது. இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் விகிதமான 25 சதவீதத்தை விட கணிசமான குறைவாகும். குறைந்த வரி விதிப்பு, வருவாய் திரட்டலில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், தொற்றுநோய் நிவாரண நடவடிக்கைகளுடன், வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதமாகவும், 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 சதவீதமாகவும் 2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதத்திலிருந்து கணிசமாக விரிவுபடுத்தியது. இது 2019இல் 86.9 சதவீதமாக இருந்த அரசாங்கக் கடனை 2020இல் 100.6 சதவீதமாகவும், 2021இல் 104.6 சதவீதமாகவும் ஜிடிபி விகிதத்தில் அதிகரிக்க வழிவகுத்தது. ஏன் இந்த அறிவிப்பு? இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டம் முன்னோடியில்லாத பணவீக்க அழுத்தங்கள், தொடர்ந்து பெரிய நிதி மற்றும் இருப்பு நிதி தேவைகள், பெரிய கடன் அதிகரிப்பு மற்றும் முக்கியமான குறைந்த அளவிலான இருப்புக்கள் மற்றும் மாற்று விகிதத்தில் அழுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் கடன் மதிப்பீடு குறைவதால் வணிகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை இழப்பு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படும். இலங்கை பொருளாதார நெருக்கடி பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச சந்தைகளுக்கான அணுகல் இழப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு மற்ற அந்நிய செலாவணி அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை என்பன அரசாங்க வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதில் கணிசமான சிக்கல்களை உருவாக்கியுள்ளன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், வெளிநாட்டு மூலங்களுக்கு நிகர திருப்பிச் செலுத்தலால், முழு வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையும் உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான உள்நாட்டு ஆதாரங்களில், பெரும்பான்மையானது வங்கி மூலங்களிலிருந்து, குறிப்பாக இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டது, உள்நாட்டு வங்கி அல்லாத ஆதாரங்களில் போதுமான அளவு நிகர நிதி கிடைக்காததால் மத்திய வங்கியின் தொடர்ச்சியான கணிசமான அளவு நிதியளிப்பு பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. தற்போது, வட்டி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொப்பனவுகள் போன்றவற்றின் கணிசமான பகுதி உட்பட அரசாங்கத்தின் செலவினங்களைச் செய்வதற்கு பொது திறைசேரி மத்திய வங்கியின் நிதியுதவியை பெற வேண்டிய நெருக்கடியான நிலைக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே, வருவாயை மேம்படுத்துதல் மற்றும் 2022 மற்றும் அதற்கு அப்பால் நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை ஆதரிக்கும் வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக செலவினங்களை குறைக்க வலுவான நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்" என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?