முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 488 தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள்
“எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பனீஸின் தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி எனும் ஆப்கானிய அகதி, “அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்ததால் சுமார் 15 ஆண்டுகளாக எனது தாயிடமிருந்து நான் பிரிந்திருக்கிறேன். இன்றிரவு (தேர்தல் முடிவு வெளியாகிய நேரம்) நான் அழுதேன், இறுதியாக எனது தாயையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் பார்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி! இரக்கம், கண்ணியம், மற்றும் மனிதாபிமானம் வென்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் அவுஸ்திரேலியவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளில் நூற்றுக்கணக்கானோர் தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டு இருந்தனர். பல அகதிகள் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தனர், பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர முடியாத வகையிலான தற்காலிக விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இவ்வாறு தற்போது தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பாதிக்கப்பட்ட அகதிகள் அக்கூட்டணியின் தோல்வியைக் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?