முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 530 தமிழர்களே உஷார்

தமிழர்களே உஷார் … இலங்கை செல்லும் விமானங்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது: பெரும் பதற்ற நிலை தோன்றவுள்ளது !
இலங்கை விமான நிலையமான கட்ட நாயக்காவில், விமானத்திற்கு நிரப்ப எரி பொருள் இல்லை. இதனால் இலங்கை வரும் விமானங்கள் முழு அளவிலான எரி பொருட்களோடு தான் வர வேண்டும் என்று விமான சேவை திணைக்களம் பல விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் பெரும் ஆபத்து அடங்கி உள்ளதாக, விமானிகள் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக விமானம் ஒன்று தரை இறங்கும் வேளையில் தான் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு விமானம் தரை இறங்கும் வேளையில், அதில் உள்ள பெற்றோல் டேங்கில் மிக குறைவான அளவு பெற்றோல் இருப்பதே நல்லது. அப்படி என்றால் தான் அது தீ பற்றி எரிந்தாலும் இலகுவாக அணைக்க முடியும். ஆனால் பெரும் தொகையான பெற்றோலை, வைத்துக் கொண்டு தரை இறங்குவது என்பது பெரும் ஆபத்தான விடையம் என்று விமானிகள் உடனடியாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து இலங்கை செல்லும் சர்வதேச விமானங்கள் அனைத்தும், கொழும்பில் தரை இறங்கிய பின்னர் இந்தியா சென்று பெற்றோலை நிரப்பிய பின்னர். மீண்டும் கட்ட நாயக்க வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் இலங்கை செல்ல இனி டிக்கெட் விலை பன் மடங்காக உயர உள்ளது. எனவே இலங்கை செல்ல இருக்கும், உல்லாசப் பயணிகள் அதற்கு மாற்றாக வேறு நாடுகளுக்கு தான் செல்வார்கள். எனவே இலங்கைக்கு மேலும் பெரும் இடி ஒன்று தலையில் விழுந்து உள்ளது. பட்ட காலிலேயே படும்… கெட்ட குடியே கெடும் என்பார்கள். அது போல, தற்போது வருமானம் ஈட்டி வரும் உல்லாச துறைக்கும் ஆப்பு அடிக்கபப்பட்டுள்ளது. பூளூம் பேர்க் செய்திச் சேவை செய்தியின் படி, இலங்கையிடம் விமானத்திற்கான எரி பொருள் எதுவும் இன்று முதல் கையிருப்பில் இல்லை. மிஞ்சியுள்ள 500லீட்டர் அல்லது 1,000 லீட்டர்…. அது மகிந்த குடும்பம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்படும் போல…

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?