முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 497 உலகத்தமிழர்கள் கவலைப்பட வேண்டிய விடயம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்கள் இழப்பு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தால் கடத்தப்பட்டும், வலிந்து கொண்டு செல்லப்பட்டும் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்களும் இழக்கப்பட்டு வருகின்றன. தமது உறவுகளை மீண்டும் காண்பதற்கோ அவர்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிவதற்கோ முடியாத நிலையில் இதுவரை 115 உறவுகள் உயிரிழந்துள்ளனர். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி வரும் அவர்களது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து, வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இவர்கள் இருந்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்கள் இழப்பு எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களையோ கண்டுகொள்ள முடியாத நிலையில், அவல நிலை கண்ணீருக்கு மத்தியில் தொடர்கின்றது. இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து இதுவரை 115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 15 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை இவர்கள் வலியுறுத்திய போதிலும், அதனை அரசாங்கம் அலட்சியம் செய்திருந்த நிலையில், சர்வதேசத்திடம் நீதியை கோரி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்கள் இழப்பு எனினும் இதுவரை இவர்களுக்கான நீதி வழங்கப்படவில்லை. கொட்டும் மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாது தமது பிள்ளைகள், கணவன், மனைவி மற்றும் உறவினர்களுக்காக கொட்டில்களில் இருந்தபடியும், வீதிகளிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச நாடுகளின் தலையீடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தமது உறவுகளுக்காக நீதி கோரிய 115 தாய் தந்தையர்கள் இறைபதம் அடைந்துவிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?