முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 522 பெண்ணைப் பார்த்து சிரித்தாரா?

மட்டக்களப்பில் பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் வீட்டிற்குள் பூகம்பம்
மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த விவகாரத்து வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒரு வருடத்தின் முன்னர் திருமணமான ஜோடியொன்றே கடந்த 3 மாதங்களின் முன்னர் விவாகரத்து வழக்கை சந்தித்துள்ளனர். திருமணமாகிய ஆரம்பத்தில் ஒரு சில மாதங்கள் தமது உறவு சுமுகமாக காணப்பட்டதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ள 23 வயதான பெண் குறிப்பிட்டுள்ளார். திருமணத்தின் பின்னர் வெளிநாட்டிலுள்ள பெண்ணின் மாமனாரின் வீட்டில் அவர்கள் குடியிருந்தனர். விற்பனை முகவராக செயற்படும் 27 வயதான கணவரில் ஏற்பட்ட சந்தேகமே விவாகரத்து வழக்கிற்கு காரணமாகியுள்ளது. தாம் குடியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மாடி வீட்டின் மேல் தளத்திற்கு புதிதாக ஒரு தம்பதி வாடகைக்கு குடிவந்ததாகவும், அந்த வீட்டு பெண்ணும், தனது கணவரும் அடிக்கடி பார்த்து சிரித்து கொள்வதுடன், பல சந்தர்ப்பங்களில் சைகை மொழியில் தகவல் பரிமாறியதை கண்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். அத்துடன் பெண் அடிக்கடி- ஏதாவது சாக்கில்- மாடியிலிருந்து தமது வீட்டு பக்கமாக வந்து நிற்பதாகவும், அப்போது தனது கணவரும் வெளியில் செல்வதாகவும், இருவரும் இப்படி சைகை மொழி பேசுவதை சில நாட்களின் பின்னரே கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கணவர் வேலைக்கு சென்ற பின்னர், மாடி வீட்டு பெண்ணுடன் சென்று தான் பேசியதில், தனது கணவரும், அந்த பெண்ணும் முன்னாள் காதலர்கள் என்பது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு காதல் விவகாரம் இருந்ததை கணவர் திருமணத்தின் முன்னரும் தெரிவிக்கவில்லை என சாடிய மனைவி , இந்த விவகாரத்தின் பின்னர் தான் சண்டையிட்ட போதும் அதை கணவர் ஏற்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை , அந்த பெண் தனது முன்னாள் காதலியல்ல, நெருங்கிய நண்பியாக மட்டுமே இருந்தார், தமக்குள் வேறெந்த உறவும் இருக்கவில்லை என கணவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மனைவி சந்தேகப்படும் இயல்புள்ளவர் என்றும், அவர் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவர் தரப்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தம்பதியினரை உளவியல் ஆலோசகரிடம் நீதிபதி பரிந்துரைத்திருந்தார். எனினும் உளவியல் ஆலோசகரின் ஆற்றுப்படுத்தல்களிலும் அந்த தம்பதியினரின் பிரிவை சரி செய்ய முடியவில்லை. அத்துடன், விவாகரத்து கோரிய பெண்ணிற்கு உளச்சிக்கல்களும் இல்லையென்றும் உளவியல் ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?