முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 503 உயிரிழந்த இலங்கை தமிழர்!

ஓடும் ரயிலில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான தகவல்
லண்டனில் சுரங்க இரயில் முன்னர் குதித்த இலங்கை தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Isleworth-ஐ சேர்ந்த Shivahar Sirikananathan (41) என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி Turnham Green சுரங்க இரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த இரயில் முன்னர் குதித்தார், இதை பார்த்த அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுனர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் அது முடியாமல் போனது. இந்த சம்பவத்தில் Shivahar உயிரிழந்தார். இது குறித்து பேசிய இரயில் ஓட்டுனர், பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் வேகமாக வந்து அவர் குதித்தார். என்னால் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார். Shivahar தண்டவாளத்தில் குதிக்கும் நேரத்தை பார்த்து கொண்டிருந்தார், அவர் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டார் என நம்புவதாக தெரிவிக்கிறார். Shivahar மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்த நிலையில் பிரேதப் பரிசோதனையில், தசை எலும்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. நச்சுயியல் அறிக்கையில், பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படும் Pregabalin மருந்து அவர் உடலில் இருந்ததற்கான அடையாளம் தென்பட்டது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 2019ல் நடத்திய ஆய்வின்படி இந்த மருந்தானது தற்கொலை எண்ணத்துடன் இணைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. Coroner Gemma Brannigan வெளியிட்ட முடிவில், Shivahar பிளாட்பார்மில் இருந்து ரயிலுக்குள் இறங்க உறுதியான முயற்சியை மேற்கொண்டது ஓட்டுனரின் சாட்சியின் மூலம் தெரிகிறது. அதே நேரம் அவரது மனநிலையை தீர்மானிக்க முடியவில்லை. Shivahar மரணம் ஒரு தற்கொலை என்றே நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். Shivahar குடும்பத்தார் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அவர் நல்ல குணமுள்ள மனிதர். அவரின் மரணம் பெற்றோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருமணமாகாத Shivahar கிங்ஸ்டன் கவுன்சிலில் கணக்கியல் மற்றும் பிற தகவல் தொழில்நுட்பப் பணிகளில் பணியாற்றினார். அவர் உள்ளூர் அணிக்காகம்கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். நாங்கள் அவருடன் வழக்கமான தொடர்பில் இருந்தோம். Shivaharக்கு பண பிரச்சனையோ அல்லது உடல்நலப்பிரச்சனையோ கிடையாது. எந்த சூழ்நிலையிலும் அவருக்கு எந்த தொந்தரவும் ஏற்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர். More News 4U:

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?