முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 979

 அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாண சபைகளுக்கு கீழ் காணப்படும் பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.



இதன்மூலம் இனப்பிரச்சனை தீர்விற்கு தாம் தயாரில்லையென்ற செய்தியை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கை தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்திய சிகிச்சைகள், சத்திர சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.


எனினும் தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படும் இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருகின்றமை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.


இதன்படி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.


வைத்திய சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமானது என அரசாங்கம் கூறியுள்ளது.


இதன்படி மேற்குறிப்பிட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எனினும் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் இந்த செயற்பாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.


இந்த நடவடிக்கை அதிகாரப்பரவலின் நோக்கத்தை இல்லாமலாக்கும் செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?