முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 985

 வெளிநாட்டவர்களுக்கென புதிய ஆஸ்திரேலிய விசா அறிமுகமாகிறது!



ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்கு வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்கான புதிய விசா அறிமுகமாகிறது.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பத்து நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் புதிய விவசாய விசாவின்கீழ் ஆஸ்திரேலியா வந்து இங்குள்ள விவசாயிகளிடம் பணிபுரிய முடியும்.


ஆஸ்திரேலியா விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்கான புதிய விசா அறிமுகமாகிறது.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட 10 நாடுகள் இப்புதிய விசாவுக்கு தகுதிபெறும் நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள பணியாளர்களை இப்புதிய விசா மையப்படுத்தியுள்ளதால் இவர்கள் சுரண்டலுக்குள்ளாகும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரிட்டன் நாட்டவர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட இப்புதிய விவசாய விசாவில் தற்போது இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, Brunei மற்றும் Laos ஆகிய 10 நாடுகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன.  

இப்புதிய விசாவை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளது.


பிரிட்டனிலிருந்து working holiday விசாவில் வருபவர்கள்(backpackers) தமது விசாவை நீட்டிக்க வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய நிலங்களில் வேலைசெய்யவேண்டுமென்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்படவுள்ளதை அடுத்து இப்புதிய விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஆஸ்திரேலியா-ஐக்கிய இராச்சியம் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ் working holiday  விசாவிற்கான நிபந்தனை தளர்வு கொண்டுவரப்படுகிறது.

இதையடுத்து ஆஸ்திரேலிய விவசாய நிலங்களில் வேலைசெய்யும் சுமார் 10 ஆயிரம் பிரிட்டிஷ் வேலையாட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் அரசு இப்புதிய விவசாய விசாவை சுமார் 10 நாடுகளுக்கு அறிமுகம் செய்கிறது.


'ஆஸ்திரேலியாவில் விரைவாக நிரந்தர வதிவிடம் பெறும் விசா'

புதிய விவசாய விசாவின்கீழ் பணியாளர் ஒருவர் 3 வருடங்களுக்கு ஆஸ்திரேலியா வரமுடியும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 மாதங்கள் விவசாயநிலங்களில் பணிபுரிந்துவிட்டு மிகுதி 3 மாதங்கள் தமது சொந்தநாட்டுக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.


அரசின் இப்புதிய அறிவிப்பை வரவேற்றுள்ள தேசிய விவசாய சம்மேளனம், குறித்த விவசாய விசாவை அறிமுகம் செய்யுமாறு நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாகவும் அதை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலிய விவசாய நிலங்களில் வேலைசெய்த backpackers-இன் எண்ணிக்கை 160,000 இலிருந்து 40 ஆயிரத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும்,  இப்புதிய விசாவின் கீழ் தென்கிழக்காசியாவிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவிர்த்திசெய்ய முடியும் எனத் தான் நம்புவதாகவும் தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் Fiona Simson தெரிவித்தார்.


அதேநேரம் இப்புதிய விசா தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள பணியாளர்களை மையப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் இவர்கள் சுரண்டலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.


பெற்றோர் விசாவுக்கான நிபந்தனையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது!

கொரோனா குறித்த தகவல்கள் இவ் விசாவினால் தாய் தகப்பனை எடுப்பவர்களிற்கும் புதிய சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?