போராளிகளின் உணர்வில் இருந்து ஒரு மடல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மிக பலமிக்க முப்படைகளோ அல்லது அவர்களின் வீரம் மிக்க போராளிகளோ அல்லது
அவர்கள் கொண்டிருக்கும் அதிநவீன ஆயுதங்களோ அல்ல, மாறாக உலக தமிழர்களின் மத்தியில் புலிகளுக்கு இருக்கும் ஆதரவு எனும் மாபெரும் சக்திதான் புலிகளின் பலம்.
இந்த ஒரே சக்திதான் அன்று ஒற்றை துப்பாகியுடன் தொடங்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டத்தை, உலகமே வியக்கும் வகையில் பலமிக்க முப்படைகளுடன் கூடிய மரபுரீதியான விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டியது.
இந்த ஒரே காரணம் தான் அன்று முள்ளிவாய்க்காளில் 32ர்கும் மேற்பட்ட நாடுகள் புலிகளை எதிர்த்தபோதும், எதற்கும் பணியாது, எதற்கும் அஞ்சாது எம் தலைவரையும், அங்கிருந்த போராளிகளையும் தொடர்ந்து உறுதியுடன் போராட வைத்தது.
எமது மூன்று தசாப்த கால நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் பாதையில், நாம் பலமிழந்து தோல்வியடையும் போது, நம்மை கைகொடுத்து தூக்கி விட்டதும், நாம் பலத்துடன் போர்க்களங்களில் வெல்லும் போது கைதட்டி பாராட்டி எமது விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருப்பது இந்த உலக தமிழர்களின் ஆதரவு எனும் ஒரே சக்திதான்.
இந்த ஆதரவு எனும் மாபெரும் சக்திமிக்க ஆயுதம் எம் தலைவரிடம் இருக்கும் போது, எந்த படை வந்து என்ன செய்துவிட முடியும் எம்மை...? எந்த ஒரு விடுதலைப்போராட்டமும் தோல்விகளையும், துன்பங்களையும் துரோகங்களையும் சந்திக்காமல் வெற்றியடைந்ததாக சரித்திரமும் இல்லை. எமது வரலாறும் அது போன்றதே
எமக்கான வெற்றி காலம் தாழ்த்தி போகலாம், ஆனால் ஒருபோதும் கைநழுவிப் போகாது என்பதுவே உண்மை. இலங்கை இருநாடாக வேண்டும், தமிழீழம் தனிநாடாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், நிச்சயமாக அது ஒரு நாள் நடந்தே தீரும்.
கருத்துகள்