முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b23

போராளிகளின் உணர்வில் இருந்து ஒரு மடல்



 தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மிக பலமிக்க முப்படைகளோ அல்லது அவர்களின் வீரம் மிக்க போராளிகளோ அல்லது


 அவர்கள் கொண்டிருக்கும் அதிநவீன ஆயுதங்களோ அல்ல, மாறாக உலக தமிழர்களின் மத்தியில் புலிகளுக்கு இருக்கும் ஆதரவு எனும் மாபெரும் சக்திதான் புலிகளின் பலம்.

இந்த ஒரே சக்திதான் அன்று ஒற்றை துப்பாகியுடன் தொடங்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டத்தை, உலகமே வியக்கும் வகையில் பலமிக்க முப்படைகளுடன் கூடிய மரபுரீதியான விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டியது.


இந்த ஒரே காரணம் தான் அன்று முள்ளிவாய்க்காளில் 32ர்கும் மேற்பட்ட நாடுகள் புலிகளை எதிர்த்தபோதும், எதற்கும் பணியாது, எதற்கும் அஞ்சாது எம் தலைவரையும், அங்கிருந்த போராளிகளையும் தொடர்ந்து உறுதியுடன் போராட வைத்தது. 


எமது மூன்று தசாப்த கால நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் பாதையில், நாம் பலமிழந்து தோல்வியடையும் போது, நம்மை கைகொடுத்து தூக்கி விட்டதும், நாம் பலத்துடன் போர்க்களங்களில் வெல்லும் போது கைதட்டி பாராட்டி எமது விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருப்பது இந்த உலக தமிழர்களின் ஆதரவு எனும் ஒரே சக்திதான்.


இந்த ஆதரவு எனும் மாபெரும் சக்திமிக்க ஆயுதம் எம் தலைவரிடம் இருக்கும் போது, எந்த படை வந்து என்ன செய்துவிட முடியும் எம்மை...? எந்த ஒரு விடுதலைப்போராட்டமும் தோல்விகளையும், துன்பங்களையும் துரோகங்களையும் சந்திக்காமல் வெற்றியடைந்ததாக சரித்திரமும் இல்லை. எமது வரலாறும் அது போன்றதே


எமக்கான வெற்றி காலம் தாழ்த்தி போகலாம், ஆனால் ஒருபோதும் கைநழுவிப் போகாது என்பதுவே உண்மை. இலங்கை இருநாடாக வேண்டும், தமிழீழம் தனிநாடாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், நிச்சயமாக அது ஒரு நாள் நடந்தே தீரும்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?