முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 1000

 தாயின் அஸ்தியுடன் வந்த 11 மாத குழந்தை…. கண்ணீர் மல்க கட்டியணைத்த தந்தை….!!



தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா திரும்பி வந்துள்ளார்.

 

அதன்பின் பாரதி கடந்த மார்ச் மாதம் மீண்டும் தன்னுடைய 11 மாத குழந்தையுடன் பணிப்பெண் வேலை செய்வதற்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் துரதிஸ்டவசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பாரதியின் உடலை அங்கேயே எரித்து விடும்படி அவருடைய கணவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாரதியுடன் துபாய்க்கு சென்ற 11 மாத கைக்குழந்தையின் நிலைமை குறித்த தகவல்களை அவருடைய தோழிகள் துபாய் நகரத்திலிருக்கும் தி.மு.க அமைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்கள்.


மேலும் பாரதியின் 11 மாத குழந்தையின் நிலை குறித்த தகவல் கள்ளக்குறிச்சியின் எம்.பியான கவுதம சிகாமணிக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர் பாரதியின் 11 மாத குழந்தையின் நிலைமையை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனே தமிழக முதலமைச்சர் பாரதியுடன் துபாய்க்கு சென்ற குழந்தை இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்பின் சுரேஷ் என்பவர் துபாயிலிருந்து குழந்தையை விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வந்து பாரதியின் கணவரான வேலனிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது நீண்ட நாள் கழித்து தன்னுடைய குழந்தையை பார்த்த தந்தை கண்ணீர் மல்க கட்டியணைத்து கொஞ்சியுள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?