அகதியாக ஆஸ்திரேலியா சென்று பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்று புகலிடம்கோரியவர். தற்போது பிரிஸ்பேனில் பயணிகள் பேருந்து ஓட்டுநராக சோதிகா பணிபுரிந்துவருகிறார்.
மேலும் நான் யாழ் மாவட்டம் பருதித்துறை சிறு வயதிலே அகதியாக வாழவேண்டிய சூழ்நிலையை இலங்கை இனப்பிரச்சனை எனக்குக் கொடுத்தது.
முதலில் இலங்கையிலும் பின்னர் இந்தியாவிலும் மொத்தம் 25 வருடம் எனது அகதி வாழ்கை தொடர் கவலையாக அம்மா அப்பா இறந்து போக நம்பி ஏற்ற திருமணவாழ்க்கை மூன்று வருடத்தில் முறிந்து போனது.
இரண்டு வயது மகனுடன் தன் நம்பிக்கையுடன் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்தேன். 8 வருடங்களிற்கு முன்னர் படகு மூலம் அரசியில் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்தேன். அப்ப எனது மகனிற்கு 6 வயது வாழ்வா சாவா என்ற ஒரு ஆவத்தான பயணத்தை மேற்கொண்டேன். கடவுள் புண்ணியத்தால் கடவுளின் அருளால் கரை சேர்ந்து குயின்ஸ்லாந்து மாநிலம் Woodrige என்ற இடத்தில் அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டு சேவ் 5 year விசா வழங்கப்பட்டது,
எனக்கு முதலில் இதில் அனுபவம் இருக்கவில்லை நான் இங்கே வந்துதான் நான் car பழகினேன் நான் பல வேலைகளிற்குப்போனாலும் அதில் எனக்கு பெரிதாக ஆர்வம்யிருக்கவில்லை நாலு பேர் பார்க்கக் கூடிய ஒரு நல்ல வேலை செய்ய வேண்டுமென எதிர்பார்த்தேன் இது கிடைத்தது என அவர் தெரிவித்தார்.
கருத்துகள்