முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b05

 ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகளை பிற நாடுகளில் குடியமர்த்தும் திட்டம் முறையானதா?



ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கிலோ மீட்டர்கள் அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை நடத்தப்பட்ட விதம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக வாழ அந்நாட்டு அரசு அனுமதியிருக்கிறது. அதே சமயம், அவர்களின் எதிர்காலம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே உள்ளது எனக் கூறப்படுகின்றது.


இந்த சூழலில் தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவது குறித்த விவாதங்களும் ஆஸ்திரேலிய அரச மட்டத்தில் நடந்தன.


ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தங்கள் நாட்டில் மீள்குடியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தங்களை கம்போடியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டிருக்கிறது. அத்துடன் இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நியூசிலாந்தின் சலுகையையும் பரிசீலணையில் உள்ளது.


கடந்த நவம்பர் 2016 யில் கையெழுத்தான ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.


இதே போல், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை


கம்போடியாவில் மீன் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 50 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் ஆஸ்திரேலியாவின் இத்திட்டம் தோல்வியிலேயே முடிந்தது.


கடந்த பல ஆண்டுகளாக அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கையாளும் ஆஸ்திரேலிய அரசு, வரும் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கும் கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கும் 2 பில்லியன் டாலர்கள் செலவு செய்ய ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் தஞ்சமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.


ஆஸ்திரேலியாவின் இந்த போக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல மனித உயிர்களை பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியா மீதான உலக நன்மதிப்பை இது சீரழிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?