முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b48

 புலம்பெயர் நாட்டில் இலங்கை தமிழ் பெண்ணை- அவரது கணவரின் நண்பர்களே கற்பழித்துள்ளார்கள் !


இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவர், கணவரின் நண்பர்களால் அடுத்தடுத்து இரண்டு நாள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ் நாட்டையே உலிக்கியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழகத்தின், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய குறித்த பெண். குடும்ப தகராறு காரணமாக இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு இந்த பெண் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்…..



 

அப்போது அவரது கணவரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டீபன் என்பவர் போதையில் இவரது வீட்டு கதவை தட்டினார். இந்த பெண் கதவை திறந்ததும் காண்டீபன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து காண்டீபன் தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார். இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் திகதி இரவு இந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை ஆண்ட்ரிஸ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து காண்டீபன் மற்றும் அவரது நண்பர் ஆண்ட்ரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?