முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b01

 சீனா இன்று மிக சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது! - ரணில் விக்கிரமசிங்க



கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனா இன்று உலகப் பொருளாதாரத்தில் மிக சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூம் வழியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


"ஒரு தொழில்துறை அல்லாத விவசாய நாட்டை ஒரு தொழில்மயமான நாடாக மாற்ற முயற்சிக்கும்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியம்.


சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக வளர்ச்சியின் யதார்த்தத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொடங்கியது," என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


“சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவுக்கு வழங்கிய தலைமையை நாம் பாராட்ட வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனா இன்று உலகப் பொருளாதாரத்தில் மிக சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது.



 

“நாம் அனைவரும் இன்று கடந்த காலத்தை நினைவில் கொள்கிறோம். இலங்கையும் சீனாவும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக 1919 இல் சுதந்திரப் போரைத் தொடங்கின.


அந்த நேரத்தில் இலங்கையில் நாங்கள் “இலங்கை தேசிய காங்கிரஸை” ஆரம்பித்தோம். சீனா “மே 04” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. அந்த இயக்கத்தின் மூலம்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921 இல் உருவாக்கப்பட்டது.


சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில், நான் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அவர்களை வாழ்த்துவதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.


சீனாவை உலக சக்தியாக மாற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய தலைவர்களில் ஒருவர் ஜனாதிபதி டெங் சியாவோபிங். அந்த நேரத்தில், சீன அனுபவத்தின் அடிப்படையில், சீனாவுக்கு தனித்துவமான சோசலிசம் உருவாக்கப்பட்டது” என அவர் மேலும் கூறினார். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?