முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b45

 விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்


நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளை நினைவு கூரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏன் நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.


இதற்கு பதில் அளித்த அவர்,


தமிழீழ வீடுதலைப் புலிகள் அல்ல - யாராக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நினைவு நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித பிரச்சினையுமில்லை.


எனினும் பொதுவான நிகழ்வுகளை நடத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது.


அவ்வாறு உறுதியளித்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏதாவது கருத்துக்களை உறுப்பினர்கள் வெளிப்படுத்துவார்கள் எனின் சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்.


ஆகவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னரே தீர்மானம் மேற்கொள்ள முடியும்.


நாடாளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சில விடயங்களுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும், எனினும் அதே விடயத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு அதில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனின் நாடாளுமன்ற யாப்பினை மாற்றியமைக்க வேண்டும்.


அதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் கூறுங்கள் நாம் அது தொடர்பில் அவதானம் செலுத்துகின்றோம் என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?