முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 952

 இலங்கைக்குள் நுளைந்த அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள்


அமெரிக்காவின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் என்ற பெயரில், அமெரிக்காவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் வினவியபோது, அது தொடர்பில் தன்னால் பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.


கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான அமெரிக்காவின் உதவிப் பொருட்களுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு அமெரிக்க விமானம் 5 நாட்களுக்கு முன்னர் வந்திருந்தது. அந்த விமானத்தில் 4 அமெரிக்கர்களும் வந்திருந்தனர்.


அவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.


வெளிவிவகார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றது. மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளின் போது, மியன்மாரில் இருந்த அமெரிக்க ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும், இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.


அதேவேளை, குறித்த நபர், சுற்றுலா விசாவின் ஊடாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே இராணுவத் தளபதி பதிலளிக்க மறுத்துள்ளார்.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?