முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b378

 எமது கண்ணீருக்கு என்ன பதில்? காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆதங்கம்


காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது என தெரியாமல் வாழ்ந்து வருகின்றோமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.


நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்தமுறை நடைபெறும் ஜெனிவாக் கூட்டத்தொடரின் மூலமாக எமது காணாமல் போன உறவுகளின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும். நேரடியாக ஜெனீவா சென்று சாட்சியமளிக்க விட்டாலும் கூட இந்த கொரோனாக் காலத்தில் ஊடகங்கள் மூலமாக எங்களுடைய கருத்தை கொண்டு சேர்க்க விரும்புகின்றோம்.


1500 நாட்களுக்கு மேலாக அச்சுறுத்தல்களையும் தாண்டி எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம். ஜெனிவாவுக்கு சென்று எமது உறவுகளுக்காக நாங்கள் பலமுறை குரல் கொடுத்திருக்கிறோம்.


எமது கண்ணீருக்கு என்ன பதில்? காலா அவகாசமோ? கால நீடிப்போ? காணாமல் போனோர் அலுவலகமோ எமக்கு வேண்டாம். சிறிலங்கா அரசு மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையை நாடுகின்றோம்.


காணாமல்போன உறவுகளைத் தேடி அலைந்த பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். நாங்களும் எங்கள் உயிரை எப்போது மாய்ப்பது என தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம்.


நாங்கள் 12 வருடங்களாக போராடி வருவது பணத்திற்காக அல்ல எங்களுடைய பிள்ளைகளின் உயிர்ப்பிச்சைக்காகவே. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த பெரிய சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் எங்களுடைய பிள்ளைகளை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?