முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b383

 அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியாவின் புதிய கூட்டு! எதிர் நடவடிக்கைக்கு தயாராகும் சீனாவின் “மாஸ்டர் பிளான்”




பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக முக்கியமான ஆசிய பிசிபிக் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இணைவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது.


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை என்ற இந்த ஒப்பந்தம் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்த ஒன்றாகும்.


எனினும் 2017 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.


இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு உலகின் இரண்டவாது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, நியூசிலாந்து வர்த்தக அமைச்சரிடம் விண்ணப்பத்தை கையளித்தது என்று சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்தார்.


இந்த உடன்படிக்கையின் நிர்வாக மையமாக நியூசிலாந்து செயற்படுகிறது.


ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை உடன்படிக்கை அவுஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உட்பட 11 நாடுகள் மூலம் 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.


இதேவேளை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.



 

ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.


அது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஷரத்துகளும் இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தில் வருகின்றன.


எனினும் ஆக்கஸ் ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று சீனா விமர்சித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?