இந்தியா - இலங்கை இடையில் பாலம் இருந்தது உண்மையா? ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா
இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன.
இது ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த பாலம் வெறும் கற்பனைதான் என்ற வாதமும் ஒரு பக்கம் இருந்து வந்த நிலையில் ராமர் பாலம் இருந்தது உண்மை தான் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்:
இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான்.
ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்