கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற தமிழர்களின் மரவிற்கு ஏற்ப தனது கடமையை செய்த தமிழன்
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய த.தே.ம. முன்னணியினர்!
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்றைய தினம் (15) மாலை 06 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கட்சியின் ஊடக பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டின் போது, 5 அம்ச உண்ணாவிரத கோரிக்கையை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நீராகாரமும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்