முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b338

 விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்ற விவகாரம் - முக்கிய ஆவணத்தை ஜெனிவா அனுப்ப மறுக்கும் தமிழரசுக் கட்சி




தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லையென அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.


இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான இணைய வழியிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்ற போது சிறிலங்கா இராணுவமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.


இதன்பின்னணியில் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்தும் காட்டிக்கொடுத்து வருவதாக கூட்டமைப்பிற்கு எதிரான அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.


இந்த நிலையில் விடுதலை புலிகளின் யுத்தக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரும் ஆவணத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஜெனிவாவிற்கு அனுப்பவில்லையென அக்கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?