முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b388

 விக்டோரிய மாநிலத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உச்சத்தில்; பூர்வீக குடி மக்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்குகிறது NSW




அதிகப்படியான பூர்வீக குடி மக்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாட்டில் NSW அரசு இறங்கியுள்ளது

விக்டோரிய மாநிலத்தில் ஆறு மணி நேரம் பொது போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம்

Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்

 


நியூ சவுத் வேல்ஸ்



New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,331 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.  தொற்றுள்ளவர்களில் 1,219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்


NSW மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் 81.2 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் பெற்றுள்ளதாகவும், 50.6 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார்.


12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பூர்வீக குடி மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த வார இறுதியில் பல பூர்வீக குடி சமூகங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.


தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 


விக்டோரியா


விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 535 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இதில் 62 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.


தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக, மெல்பன் நகரில் பொது போக்குவரத்து சேவைகள் ஆறு மணி நேரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  அத்தியாவசிய சேவை வழங்குவோர் மற்றும் தடுப்பூசி போட செல்வோர் மட்டுமே மெல்பன் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.


தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 


கடந்த 24 மணி நேரத்தில்


ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  ஏழு பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40.54 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்.

Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது, இந்த வார இறுதி முதல் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?