விக்டோரிய மாநிலத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உச்சத்தில்; பூர்வீக குடி மக்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்குகிறது NSW
அதிகப்படியான பூர்வீக குடி மக்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாட்டில் NSW அரசு இறங்கியுள்ளது
விக்டோரிய மாநிலத்தில் ஆறு மணி நேரம் பொது போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம்
Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,331 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள். தொற்றுள்ளவர்களில் 1,219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
NSW மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் 81.2 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் பெற்றுள்ளதாகவும், 50.6 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார்.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பூர்வீக குடி மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த வார இறுதியில் பல பூர்வீக குடி சமூகங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 535 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 62 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும்.
தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக, மெல்பன் நகரில் பொது போக்குவரத்து சேவைகள் ஆறு மணி நேரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்குவோர் மற்றும் தடுப்பூசி போட செல்வோர் மட்டுமே மெல்பன் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஏழு பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40.54 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்.
Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது, இந்த வார இறுதி முதல் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கருத்துகள்