முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b418

பிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான
குற்றவாளி ஆரம்பப் பாடசலை ஆசிரியை ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளார். தெற்கு லண்டனில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் 28 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியையான சபீனா நெஸ்ஸா கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலை குற்றவாளியான அல்பேனியரான கோசி சொலாமஜ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஈஸ்ட்போர்னில் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெற்கு லண்டனில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விமர்சனங்களை எழுப்பியது ஆசிரியை மரணம். இதேவேளை லண்டனில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனில் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து பேரணிகளில் கலந்து கொண்டனர். இதேவேளை ஆசிரியை கொலை தொடர்பாக சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டு, குற்றவாளியை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சபீனாவைக் கொலை செய்ததாக, கோசி செலாமஜ் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை லண்டன் நீதிமன்றத்தில் குற்றவாளியை முற்படுத்தப்பட்ட போது, கொலைக்குற்றச்சாட்டை குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி மறுத்துள்ளார். இதேவேளை கொலை குற்றவாளியான 36 வயதான கோசி செலாமஜ் சமீப காலம் வரை, அவர் தனது காதலியுடன் அந்த பகுதியில் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே பிரிந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?