முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL E elam news b380

 யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம மரணம்! தீவிர விசாரணையில் பொலிஸார்




யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகே நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


கீரிமலை, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான ம.ஜெனுசன் என்ற இளைஞனே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.


காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில், காங்கேசன்துறை பிரதான வீதியில் சடலம் காணப்பட்டது. இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது.


அந்தப்பகுதியில் சில காலணிகளும் சிதறிக் காணப்பட்டன. அந்த காலணிக்குரியவர்கள் இன்று இளைஞனுடன் முரண்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.


நல்லிணக்கபுரத்தில் இன்று நடைபெற்ற மரணவீட்டில் இளைஞர்கள் சிலர் மது அருந்திய பின்னர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக,சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் வந்த போதோ அல்லது பொலிஸ் நிலையம் வந்த இளைஞனை யாராவது விரட்டி வந்து தாக்கினார்களா என ஆராயப்படுகிறது.


இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இளைஞனின் பின்தலையில் காயம் காணப்படுகிறது. அந்த பகுதியில் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டதை பாதசாரிகள் அவதானித்துள்ளனர்.


எனினும், இளைஞன் உயிரிழந்த போது யாரும் அவதானித்திருக்கவில்லை. வீதியோரம் இளைஞன் வீழ்ந்துள்ள தகவலே பொலிசாருக்கு கிடைத்தது. விபத்தில் சிக்கிய இளைஞனாக இருக்கலாமென கருதிய பொலிசார், உடனடியாக இளைஞனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


எனினும், அங்கு அவர் உயிரிழந்திருந்தார். இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் மர்மம் உள்ளமை தெரிய வந்தது. மரணச்சடங்கில் இளைஞனுடன் முரண்பட்ட ஒரு இளைஞன் சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?